ஷெய்க் பதுஹுல்லா குலான்
ஷெய்க் பதுஹுல்லா குலான் அவர்கள் சமகால முஸ்லிம் உலகின் சிறந்த சிந்தனையாளராகவும், கல்வியாளராகவும், தாஈயாகவும் கருதப்படுகிறார்கள். 1941ஆம் ஆண்டு துருக்கியில் பிறந்த அவர்கள் பதியுஸ்ஸமான் நுர்ஷி அவர்களின் அமைப்பில் இணைந்து கொண்டாரகள். அவர்கள் தொடர்ந்து அமைப்பின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்கள்.
இஸ்லாமிய அடிப்படையிலான துருக்கியை நிறுவுவதில் அவர்கள் பாரிய அளவிலான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள். மத சார்பற்ற துருக்கி அரசாங்கங்கள் மீது அவர்கள் வெறுப்படைந்ததனால் 1999ஆம் ஆண்டில் இருந்து தாய் நாட்டிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். மதங்களுக்கு இடையிலான கலந்துரையாடல்களை நடத்துவதிலும் அவர்கள் மகத்தான பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
துருக்கியின் தற்போதைய ஆட்சியாளர் றிசப் தையிப் எரிடோகனின் ஆட்சிக்கு அவர்கள் தொடர்ந்தும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ஷெய்க் பதுஹுல்லா குலான் முஸ்லிம் உலகில் மாத்திரமன்றி மேற்கு நாடுகளிலும் சிறந்த புத்திஜீவியாகக் கருதப்படுகிறார்கள். பெல்ஜியம் நாட்டிலுள்ள லுவேன் பல்கலைக்கழகம் புத்திஜீவிகளுக்கான கற்கைக்கான பதுஹுல்லா குலான் என்ற கற்கை நெறிப் பகுதியையும் ஆரம்பித்துள்ளது.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்