MAIL OF ISLAM

Knowledge & Wisdom



நபிகள் நாயகம் ﷺ நம்மை போன்ற சாதாரண மனிதரா?

​எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான்  (கௌஸி)  கல்முனை.


உயிருக்கு உயிரான உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ﷺ அவர்கள் எம்மைப் போன்ற சாதாரன மனிதரா?


​​

♣  இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு 

நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எம்மைப் போன்ற சாதாரன மனிதர், அவர்கள் மறைவானவற்றை அறிந்து கொள்ள மாட்டார்கள். அந்த அடிப்படையில் “நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதர்தான் என்று நபியே நீர் கூறும்.” (அல்கஹ்பு – 110) என்ற பாதி வசனத்தை வைத்து கொண்டு வழிகெட்ட வஹ்ஹாபிகள் குர்ஆன், ஹதீஸ்களை ஆய்வு செய்யாமல் சில நபிமொழிகளை மறைத்து இருட்டடிப்பு செய்து கிருக்கு பிடித்தவர்களாக வழிகேட்டில் சென்று கொண்டு இருக்கிறார்கள்.


​​ஆகவே நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எம்மைப் போன்ற சாதாரன மனிதர் அல்ல என்பதையும் அவர்களுக்கு நாம் செலுத்த வேண்டிய மரியாதை, கண்ணியம், முக்கியத்துவம் பற்றி நபிமொழியை ஆதாரமாக காட்டி நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கண்ணியம் பற்றி குறைமதியில் கூட பார்க்க கூடாது, காரணம் இன்று உலகளவில் கண்ணியத்தின் சவாலாக இருக்கின்றது. ஆகவே நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எம்மைப் போன்ற சாதாரண மனிதரா? என்ற கேள்விக்குறிய பதில் பின்வருமாறு அலசுவோம்.


​​

♣ நபிகள் நாயகம் ﷺ அவர்கள் 'எம்மைப் போன்ற சாதாரன மனிதர்' என்று வஹ்ஹாபிகள் காட்டக்கூடிய போலியான ஆதாரங்களுக்கு தக்க பதில்கள்

(நபியே!) நீர் சொல்வீராக: “நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது, எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.” (அல்குர்ஆன் : 18:110)

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் எம்மைப் போன்ற சாதாரன மனிதர் என்ற சித்தாந்தமாகிறது. “நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதர்தான் என்று நபியே நீர் கூறும்.” என்ற பாதி வசனத்தை வைத்து உருவானதாகும். ஆகவே வஹ்ஹாபிகள் குர்ஆன் வசனங்களை அவர்களுக்கு தோதுவானதை எடுத்துவிட்டு அரைகுறையாக விவாதிக்கும் மடயர்கள். 'சாதாரன மனிதர்' என்று குர்ஆனிலோ, ஹதீதுகளிலோ எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை.


​​மாராக “நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே" என்றுதான் கூறப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் "(அல்லாஹ்விடமிருந்து) எனக்கு வஹி அறிவிக்கப்படுகின்றதே அப்படிப்பட்ட உங்களைப் போன்ற மனிதன் என்று (நபியே) நீர் கூறுவீராக” என்ற முழு வசனத்தை சிந்தித்தாலோ அல்லது ரஸுல்மார்களைப் பார்த்து நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள் அன்றி வேறில்லை என்று அம்மக்கள் கூறினார்கள். அதற்கு அந்த ரஸுல்மார்கள் நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தான் என்றாலுமோ, மேலும் தொழில்கள், செயல்கள் போன்ற விடயங்களில்தான் உங்களைப் போன்றவர் என்பதை புரிந்து கொண்டாலோ! இந்த தவரான வாதம் தவிடுபிடியாக ஆகிவிடுகின்றது.


​​ஆனால் அந்த வசனத்தின் தொடர்ச்சியில் எனக்கு அல்லாஹ்வின் புரத்தால் வஹீ அறிவிக்கப்படுகிறது என்ற வசனத்தை வஹ்ஹாபிகள் விழிங்கி விடுகிறார்கள். நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எம்மைப் போன்ற சாதாரன மனிதர் என்றால்? இந்த வஹ்ஹாபிகளுக்கும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வஹீ அறிவிக்கப்படுகிறதா?

அல்லது வஹியின் யதார்த்தம் என்ன? அல்லாஹ்விடமிருந்து வஹீ எந்த அமைப்பில் இறங்கும்? ஒரு நொடி பொழுதில் மிஃராஜ் யாத்திரை மூலம் ஏழு வானங்களை கடந்து அல்லாஹ்வை சந்தித்து உறவாடிவிட்டு மீண்டும் மண்ணுலகத்துக்கு திரும்பி வந்த நிகழ்ச்சி? அவர்களின் சைக்கினைக்கிணங்க சந்திரன் இரண்டாக பிளந்திருக்குமா? மரங்கள் தான் சிரம் பணிந்து வந்திருக்குமா? என்று சிந்தித்தால் தெளிவு விளங்கும்.

♦ மேலும் இந்த ரஸுல் உங்களைப் போன்ற ஒரு மனிதர்தான் என்று அநீதம் செய்பவர்கள் இரகசியமாக கூறுகின்றார்கள் (அல்அன்பியா -03) என்ற வசனத்தை சிந்தித்தாலோ இந்த தவறான சித்தாந்தத்துக்கு தெளிவான விளக்கம் கிடைக்கும். மிகப் பிரமாண்டமான மலையே தாங்கிக்கொள்ள முடியாமல் தவிடுபொடியாகி விடும்” என்று (ஸுரத்துல் ஹஷ்ர்-21) சொல்லப்பட்ட குர்ஆனை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் சாதாரண மனிதராக இருந்தால் தாங்கியிருக்க முடியுமா?


​​தொழுகைக்கு இகாமத்து சொல்லப்பட்டது அப்போது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களின் முகத்தைக்கொண்டு எங்களில் பால் முன்னோக்கி உங்களின் சப்புகளை நேராக்கிக்கொள்ளுங்கள். மேலும் ஒருவருக்கொருவர் சேர்ந்து நின்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக நான் எனது முதுகுக்குக் பின்னால் இருந்தும் உங்களைப் பார்க்கிறேன் என்று கூறினார்கள்.

(புகாரி – 719) அப்படியானால் முதுகுக்குப் பின்னால் இருந்தும் பார்க்கின்ற ஆற்றலைப் பெற்றுள்ள கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களும் முகத்துக்கு முன்னால் இருக்கின்றவைகளையே ஒழுங்காகப் பார்க்க முடியாமல் தடுமாறும் நாமும் எங்ஙனம் சமமாக முடியும்?

♦ மேலும் நிச்சயமாக ஷைத்தான் என் வடிவத்தில் வரமுடியாது என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (புகாரி ஹ.எ 6993- 6997 ஹ முஸ்லிம்: ஹ.எ 2266 -11- 2267) அப்படியானால் ஷைத்தானுக்கு வடிவம் எடுக்க முடியாது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களும் ஷைத்தானுக்கு வடிவம் எடுக்க முடிந்தவர்களான நாமும் எப்படி சமமாக முடியும்?

♦ மேலும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புனித ஆன்மா உலகிலுள்ள எல்லா ஆன்மாக்களை விட மிக ஏற்றமானது என்றும் அன்னவர்களின் மனைவிமார்கள் முஃமீன்களின் தாய்மார்கள் என்றும் அல்லாஹ்வால் சொல்லப்பட்ட (அல் அஹ்ஸாப்- 06) கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களும் நாமும் எப்படி சமமாக முடியும்?

♦ மேலும் மைய்யித்தை கப்ரில் வைக்கப்பட்டவுடன் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை மைய்யித்திடம் காட்டி இவர்களைப் பற்றி நீ என்ன சொல்லப் போகின்றாய்? என்று மலக்குமார்களால் கேட்கப்படக் கூடிய கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களும் மண்ணோடு மண்ணாகும் நானும் எப்படி சமமாக முடியும்?

♦ மேலும் கியாமத் நாளையில் கேள்வி கணக்குக்காக அல்லாஹ்வின் சமூகத்தில் நிற்பாட்டப்பட்டிருக்கும் வேளையில் தாங்களைக் காப்பாற்றி கரை சேர்க்க வேண்டுமென்று கேட்டு பாவிகள் யாவரும் சில நபிமார்களின் சமூகத்திற்கு சென்று கெஞ்சுவார்கள். இறுதியாக நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அந்தப்பாவிகளுக்காக அல்லாஹ்விடம் மன்றாடி கரைசேர்ப்பார்கள் என்று ஹதீஸ் வந்துள்ளது. (நூல்கள் புகாரி, முஸ்லிம், திர்மிதீ) அப்படியானால் பாவிகளுக்காக பரிந்துரை செய்து காப்பாற்றி கரை சேர்க்கும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களும் பரிந்துரை செய்யப்படுவதற்காக அழுது கெஞ்சி அலைமோதும் நாமும் எங்ஙனம் சமமாக முடியும்?

♦ மேலும் ண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் நம்மைப் போன்ற மனிதர் என்று கூறினால் (அதன் அக்ஸு- விளைவு) நாமும் அன்னவர்களைப் போன்ற மனிதர் என்று கூறியதாக ஆகிவிடுமே – அப்படி கூறியதாக ஆகிவிட்டால் நிச்சயமாக கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றார்கள் என்று நமது மூலமந்திரமான களிமாவிலும் பாங்கு, இக்காமத்திலும் தொழுகை போன்ற இன்னபிற வணக்கங்களிலும் கூறுவதில் என்ன பயன் இருக்கின்றது?


​​அப்படியானால் உடல் ரீதியாலும் உளரீதியாலும் குணம் ரீதியாலும் இன்னும் எந்தவொரு அம்சத்தை எடுத்துக் கொண்டாலும் அத்தனை அம்சங்களிலும் அல்லாஹ்வின் பிரமாண்டமான அருளைப் பெற்றிருக்கின்ற கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களும் நாமும் எப்படி ஒன்றாக ஆக முடியும்? என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பித்தால் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் சாதாரண மனிதர் என்ற வழிகெட்ட வஹ்ஹாபிகளின் சித்தாந்தம் சுக்குநூறாகி விடும்.


​​

♣  கண்மணி நாயகம் ﷺ அவர்கள் எம்மைப் போன்ற சாதாரண மனிதர் அல்ல, என்பதற்குறிய ஆதாரங்கள்.

♦ கவிஞர்கள் கூறுவார்கள் :​

முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'மனிதர்தான் ஆனால் எம்மைப் போன்ற சாதாரன மனிதர் அல்ல,

மாணிக்கமும் கல்லுதான் ஆனால் சாதாரன கல்லைப் போன்றெல்ல'.

♦ நிச்சயமாக நான் உங்களைப் போன்றவன் அல்ல" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.


​​நூல்: புகாரி பாகம் 2 பக்கம் 1084. கிதாபுஸ் ஸவ்மி

♦ நான் உங்களில் யாரைப் போன்றும் அல்ல என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.


​​நூல்கள்: புகாரி பாகம் 1 பக்கம் 263 கிதாபுஸ் ஸவ்மி,முஸ்லிம், மிஷ்காத் பக்கம் 111

♦ நான் உங்களின் அமைப்பைப் போன்றவனல்ல" என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.


​​நூல்: புகாரி பாகம் 1 பக்கம் 264 கிதாபுஸ் ஸவ்மி

♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து, "நபியே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நாங்கள் உங்களுடைய அமைப்பைப் பெற்றவர்கள் அல்ல" என்று ஸஹாபாக்கள் கூறினார்கள்.


​​நூல்: புகாரி பாகம் 1 பக்கம் 7 கிதாபுல் ஈமான்

♦ என் கரத்தில் லிவாஉல் ஹம்து என்ற கொடி இருக்கும். ஆதம் நபி (அலைஹிஸ் ஸலாம்) முதற்கொண்டு மற்றெல்லா நபிமார்கள் ரஸூல்மார்கள் அனைவரும் கண்டிப்பாக என் கொடியின் கீழ் வீற்றிருப்பார். இது இறைவனால் எனக்கு வழங்கப்பட்ட வெகுமதி என்ற முறையில்தான் சொல்லிக் காட்டுகிறேனே தவிர பெருமைக்காகச் சொல்லவில்லை" என்று நபிகள் நாயகமே (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தாங்கள் கூறியிருக்கிறீர்கள்.


​​நூல்கள்: இப்னு மாஜா ஹதீஸ் எண் 4308, திர்மிதி பாகம் 5 பக்கம் 247 கிதாபுல் மனாகிப், மிஷ்காத் 513)ஆகையால் எங்களையும் தாங்களின் கொடியின் கீழ் அரவணைப்பார்கள் அப்படிப்பட்ட ஒருவர் எம்மைப் போன்ற சாதாரன மனிதராக இருக்க முடியுமா?

♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நிழல் கிடையாது, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூரிய ஒளியிலும் சந்திர ஒளியிலும் நிழலில்லை என்பதாக தக்வான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். மேலும் நிச்சயமாக நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நிழல் நிலத்தில் விழுவதில்லை. ஏனெனில், அவர்கள் ஒளியாக இருந்தார்கள். எனவே அவர்கள் சூரிய ஒளியில் நடந்தாலும் அல்லது சந்திர ஒளியில் நடந்தாலும் அவர்களின் நிழலைக் காணமுடியாது. இது அவர்களின் விஷேச தன்மைகளில் ஒன்று.


​​ஹழ்ரத் இப்னு ஸபஃஸபஃ ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: கஸாஇஸுல் குப்ரா பாகம் 1 பக்கம் 68

♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் (நோன்பு திறக்காமல்) தொடர் நோன்பு நோற்றார்கள். மக்களும் அவ்வாறு தொடர் நோன்பு நோற்றார்கள். இது மக்களுக்குச் சிரமமாக இருந்தது. அப்போது நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் மக்கள் தொடர் நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள். நபித்தோழர்கள் நீங்கள் (மட்டும்) தொடர் நோன்பு நோற்கிறீர்களே! என்று கேட்டார்கள். நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள், நான் உங்களைப் போன்றவன் அல்ல (இறைவன் தரப்பிலிருந்து) உண்ணவும் பருகவும் எனக்கு வழங்கப்படுகிறது! என்று கூறினார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் உமர் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: புகாரி - 1922

♦ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) அன்னவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக பூமியிலுள்ள பொக்கிஷங்களின் திறப்புகள் என்னிடமே உள்ளது"


​​நூல்: புகாரி - 1-508, மிஷ்காத் 512

♦ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: "நான் விரும்பினால் தங்க மலைகள் என்னிடம் விரைந்து வந்துவிடும்"


​​நூல்: மிஷ்காத் 521

♦கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: "தங்கம், வெள்ளி ஆகிய இரண்டு பொக்கிஷங்களையும் கொடுக்கப்பட்டுள்ளேன்.


​​நூல்: இப்னு மாஜா 3952, மிஷ்காத் 512

​​

♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:"நான் உங்களுக்கு முன்பே (அல்கவ்ஸர்) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன்"


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல் புகாரி 6575

♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "மூர்ச்சையடைந்து விழும் (மறுமை) நாளில் மக்கள் மூர்ச்சையடைந்து (கீழே) விழுந்துவிடுவார்கள். நான்தான் (மயக்கம் தெளிந்து) எழுபவர்களில் முதல் ஆளாக இருப்பேன்"


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: புகாரி 6518

♦ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "திடமாக எனக்கு பல பெயர்கள் உள்ளன, நான் "முஹம்மத்" (புகழபடுபவன்) , நான் "அஹ்மத்" (அல்லாஹ்வினால் அதிகம் புகழபட்டவன்), நான் "மாஹி" (குப்'ரை அழிப்பவன்). நான் "ஹாஷிர்" (எனக்கு பின்னால் என் வழி தொடரும் சமுதாயம் கொண்ட இருப்பவன்), நான் "ஆகிப்" (எனக்கு பின்னால் எந்த நபியும் இல்லாது இருப்பவன்).


​​ஹழ்ரத் ஜுபைர் பின் முத்'இம் ரழியல்லாஹு அன்ஹு.

​நூல்: புகாரி 4896, முஸ்லிம் - 2849, திர்மிதி, அஹ்மத்

♦ நபி (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டு வரக் கூறியபோது தண்ணீருடன் வாய் விசாலமான ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதில் நபி (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் தங்களின் விரல்களை வைத்தபோது அவர்களின் விரல்களுக்கிடையிலிருந்து நீர் ஊற்று சுரப்பதை பார்த்தேன். அதிலிருந்து எழுபதிலிருந்து எண்பது பேர் வரை உளூச் செய்ததை நான் கணக்கிட்டேன்.


​​ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

நூல்: புகாரி - 200

♦ நாயகே! நிச்சயமாக அல்லாஹூத்தஆலா என்னை தாங்களின் பக்கம் அனுப்பி வைத்தான் ஆகையால் தங்களின் உயிரை கைப்பற்றுவதற்கு தாங்கள் எனக்கு அனுமதி தந்தால் தங்களின் உயிரை நான் கைப்பற்றுகின்றேன் இல்லையென்றால் கைப்பற்றாமல் விட்டு விடுகிறேன் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மலக்குல் மௌத் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று ஹதீஸ் வந்துள்ளது.


​​நூல்கள்: பைஹகீ, தலாயிலுந் நுபுவ்வா பாகம் 7,பக்கம் 267,மிஷ்காத் 5972

ஆகவே உலக மாந்தர் யாவரிலும் இறையச்சத்தின் உச்சியிலும் சங்கையின் உச்சத்திலும் இருக்கக்கூடிய கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடைய அந்தஸ்திற்கும் இறையச்சம் என்றால் என்னவென்றே அர்த்தம் புரியாமல் தடுமாறும் நம்முடைய அந்தஸ்திற்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் மத்தியில் உள்ள வித்தியாசம் அல்லவா இருக்கிறது?


​​ஆகவே வஹ்ஹாபிகள் கூறுவது போன்று நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எம்மைப் போன்ற சாதாரன மனிதர் என்றால்? மேற்கூறப்பட்ட அனைத்து விடயங்களையும் இந்த வழிகெட்ட வஹ்ஹாபிகளால் செய்ய முடியுமா? எனவே இதுவரை கூறப்பட்ட விளக்கங்கள் மூலம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் நம்மைப் போன்ற சாதாரன மனிதராகும் என்ற வாதம் பிழையானது என்பதை தெட்டத்தெளிவாகி விளங்கிக் கொள்ள முடிகின்றது.

எல்லாம் வல்ல நாயன் நாம் யாவரையும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மனிதரில் மாணிக்கமாக இருக்கிறார்கள் என்பதை விளங்கி நடந்த நல்லோர்களுடன் சேர்த்தருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்