MAIL OF ISLAM

Knowledge & Wisdom



லைலத்துல் கத்ரின் சிறப்புகள்


  கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

ரமழானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்.


அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)

புகாரி 2017



  கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

யார் லைலத்துல் கத்ர் இரவில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ, அவரது முன் பாவம் மன்னிக்கப்படுகின்றது. யார் ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.


அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி 1901



  (ரமழானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்.


அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)

புகாரி 2024



  அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம், லைலத்துல் கத்ர் இரவை (இதுதான் என) அறிந்துகொண்டால் நான் எவ்வாறு பிரார்த்திக்க வேண்டும் எனக் கேட்டபோது, “அல்லாஹூம்ம இன்னக்க அஃபூவன் துஹிப்புல் அஃப்வஃ ஃபு அன்னி – யா அல்லாஹ்!’ (அல்லாஹ்வே! நீ எப்போதும் மன்னிப்பவனாக இருக்கின்றாய். நீ மன்னிப்பை விரும்புகின்றவன். எனவே, என்னையும் மன்னிப்பாயாக!) எனும் துஆவை ஓதுமாறு பணித்தார்கள்.


திர்மிதி, இப்னு மாஜா