MAIL OF ISLAM

Knowledge & Wisdom





மத்ஹப்

கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

மக்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர் (ஸஹாபாக்கள்). அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள் (தாபிஈன்கள்). அவர்களுக்கும் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள் (தப அத்தாபிஈன்கள்). பின்னர் ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்களுடைய சாட்சியம் அவர்களுடைய சத்தியத்தை முந்திக் கொள்ளும். அவர்களுடைய சத்தியம் அவர்களுடைய சாட்சியத்தை முந்திக் கொள்ளும்


அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு)

​​ஸஹீஹுல் புகாரி - 3651




இமாம் அபூ ஹனிபா ரலியல்லாஹு அன்ஹு பற்றியது

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸல்மான் அல் பாரிசி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மீது தங்கள் கரத்தை வைத்து கூறினார்கள், “எவன் கைவசம் என் ஆத்மா உள்ளதோ அவன் மீது சத்தியமாக இறை நம்பிக்கை சுரைய்யா நட்சத்திரத்தில் இருந்தாலும் இவர்களில் சில மனிதர்கள் அல்லது ஒருவர் அதனை பெற்றுக்கொள்வர்."


​​ஸஹீஹுல் புகாரி 4897, ​​ஸஹீஹுல் முஸ்லிம், திர்மிதி 3321, அஹ்மத் 9410




இமாம் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு பற்றியது

கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

“கல்வி அறிவினைத் தேடி ஒட்டகப் பயணங்கள் (அதிகரிக்க) நெருங்கிவிடும். அப்போது மதீனாவின் ஓர் அறிஞரைவிட சிறந்த அறிஞரை அவர்கள் பெற்றுக் கொள்ள மாட்டார்கள்.”


திர்மிதி 2680, முஸ்னத் அஹ்மத் 2 -229, மிஷ்காத் – 246




இமாம் ஷாபியீ ரலியல்லாஹு அன்ஹு பற்றியது

கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

“குறைஷிய அறிஞர் ஒருவர் பூமியின் தட்டுக்களை கல்வியினால் நிரப்புவார்.”


மஆரிஃபுஸ் ஸுனன் வல் ஆதார் லில் பைஹகீ,

கிதாபுஸ் ஸுன்னத் லி இப்னி அபில் ஆஸ், கஷ்ஃபுஸ் ஃகஃபா