MAIL OF ISLAM

Knowledge & Wisdom



பிறை பார்த்தல்


♣  கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

ரமழான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள் (மறு) பிறையைக் காணும் வரை நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால் (முப்பது நாட்களாக) அதைக் கணித்துக்கொள்ளுங்கள்.


அப்துல்லாஹ் பின் உமர் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் புகாரி 1906



  கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால் முப்பது நாட்களாக எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள்.


அப்துல்லாஹ் பின் உமர் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் புகாரி 1907



  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள் (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள் உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாட்களை எண்ணிக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.


இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் புகாரி 1900