MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஈஸா நபியின் அழகிய நற்குணம்


ஒரு நாள் ஸெய்யதுனா ஈஸா (அலைஹிஸலாம்) அவர்கள் தம் சீடர்களுடன் ஒரு வழியே சென்று கொண்டு இருந்தனர். அப்பொழுது பன்றி ஒன்று எதிரே வருவதைக்கண்டு அதை பார்த்து “நலமாக ஒதுங்கி போ” என்று கூறினார்கள்.

அப்பொழுது அவர்களின் சீடர்கள் அவர்களை நோக்கி, “இந்த இழிந்த பிராணியிடம் இத்துணை மதுரமாக மொழிய வேண்டுமா? சீ பன்றியே ஒதுங்கி விடு ! என்று கூறக்கூடாதா? என்று வினவியபோது,

இறைவனை துதி செய்யும் என் நாவால் நன்மொழிகளைத் தவிர தீய மொழிகளை உச்சரிப்பதற்கு நான் அஞ்சுகிறேன்” என்று பதில் கூறினார்கள்.