MAIL OF ISLAM

Knowledge & Wisdom




யா ரசூலுல்லாஹ்..

தங்கள் மீது உள்ள நேசத்தினால் எங்கள்


இருதயத்தில் பட்ட காதல் தீப்பொறியானது


எங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றியது.


​யா ரசூல்லுல்லாஹ் !

தங்களை எஜமான் என்று சொல்லவா?

​இல்லை அதிபதி என்று சொல்லவா?

நான் அதிபதி என்றே சொல்லுவேன்,

அதிபதியின் ஹபீபே! 

அதிபதிக்கும் ஹபீபும் என்ன வித்தியாசம் இருக்கின்றது.

உன்னுடையது என்னுடையது என்று?


அல்லாஹ்வின் நேசர் !

முழுமையான ஜோதி ஆவர்கள் !

வெளிப்படையில் மனிதராவர்கள் !

ஆனால் சாதாரண மனிதர் அல்ல.

குர்ஆன் நேசரை ஈமான் என்று கூறுகின்றது !

ஈமானோ நேசர் என் உயிர் என்கின்றது.


​யா நபியே !


தூதுத்துவத்தின் ஒளி விளக்கே! ​​பாரில் எங்கும் பிரகாசிக்குதே !


நபித்துவத்தின் பிரகாசமே, சுடர்விட்டு ஒளிர்கிறதே !


தடாகத்தின் அமிர்தத்தை பருக கொடுப்பவரே ! தங்கள் திருவதனத்தை காட்டுவீரே !


மனதில் நறுமணத்தை அளிப்பவரே ! எங்கள் கண்களை குளிர செய்வீரே !


எங்கள் உள்ளத்தை மின்னிட செய்பவரே ! ஈமானை அளித்து எங்களை பாதுகாப்பீரே !


எங்கள் கண்களையும் மின்னிட செய்பவரே ! அது பிரகாசிக்கும் வண்ணமே !


சுகமானது உம்மை பின்பற்றுதலே ! சுயநினைவில்லை உங்கள் அன்பினில் இருக்கையிலே !


விழித்துக்கொண்டவர்கள் உம்மை நேசிப்பவர்களே ! உம்மை நேசிப்பவர்கள் விழித்துக்கொண்டார்களே !


ஒவ்வொரு மலர்களிலும் உம்முடைய நறுமணமே ! ஒவ்வொரு ஒளியிலும் உமது பிரகாசமே !


மலர்களின் நறுமணத்திலும் தாங்களே ! ஒவ்வொரு ஒளியிலும் தாங்களே !


உம் அருள் வாசலிலிருந்தே நாம் உண்ணுகின்றோம் ! உம் அருள் வாசலிலிருந்தே நாம் பருகுகின்றோம் !


உண்பதெல்லாம் உமது உணவே ! அருந்துவதேல்லாம் உமது நீர் துளிகளே !


என் நேர்ச்சையை பூர்த்தியாக்குபவரே ! நான் உம்மை நாடிவந்த போதிலே !


உம் பவள செவிகளிருந்து என் கதையை கேட்பீரே !


சொன்னாலும், சொல்லாவிட்டாலும், செய்தாலும், செய்யாவிட்டாலும்


நான் சொல்லவந்த விடயத்தை, நேசரே நீங்கள் அறிவீரே !


அவர்களுடன் உறவில்லை, வஹாபிகள் உங்கள் எதிரிகள் அல்லவா?


நான் உங்கள் திருக்கரத்தினை பற்றிப்பிடித்தாலே போதுமே!


என்னுடைய கண்ணில் மலருங்கள் என் நபியே ! என் மனதில் வருகை தாருங்கள் என் நபியே !


என் மனம் திருப்தி அடையவேண்டுமே ! என் மனம் பிரகாசித்து கொண்டே இருக்கட்டுமே !


உங்கள் ஒளியாலே ! என் மனம் பிரகாசிக்குதே !


என் மறுமையும் பிரகாசிக்கனுமே ! இது என் வேண்டுகோளே!


துடிதுடித்து அழுதேனே ! நான் இங்கு பிறக்கையிலே !


எதையும் அடையவில்லை வேதனை அடைந்த பிறகுமே !


என் இறைவனே ! நான் நேசரின் சமூகம் செல்லவேண்டுமே !


உம்முடைய சந்நிதானத்தில் நான் வரும் போது சிரம் பணிகின்றேன் !


இது சஜ்தா என்று சொல்லாதீர்கள் 'வஹாபிகளே'?


என் சிரத்தை அன்பின் அரசருக்கு காணிக்கை ஆக்குவேனே !




​​​

Source:

SAMAN E BAKSHISH (NAAT E DEEWAN)


Musannif:

Musthafa Raza Khan Noori Alahi Rahma



​இறைவனே!


என்னுடைய எல்லா நிலைகளிலும் உன்னுடைய அருட்கொடைகளால் அருள்வாயாக !


நான் சீரழியும் தருணத்தில், என்னை காப்பாற்றும் உன் நேசருடன் இருந்திட செய்வாயாக !


மரணத்தின் கஷ்டங்கள் என்னை அண்மிக்கும் வேளையிலே, உன் நேசரை காணும் மகிழ்ச்சியில் இருந்திட செய்வாயாக !


மண்ணறையில் இருள் சூழ்திடும் போது உன் நேசரின் திருவதனத்தினைக் கொண்டு பிரகாசமாக்குவாயாக !


இறுதிநாளின் குழப்பத்தில் எங்களை காக்கும்

உன் நேசருடன் எங்களை இருந்திட செய்வாயாக !


எங்களுடைய நாவு தாகத்தில் வறண்டு துடிக்கையிலே 'கவ்ஸர்' தடாகத்தினை பருக கொடுக்கும் அன்பின் அரசருடன் எங்களை இருந்திட செய்வாயாக !


இறுதிநாளின் உஷ்ணத்தினால் எங்கள் உடல்கள் எரியும் போது

நிழலற்ற தலைவரின் கொடியின் கீழ் எங்களை இருந்திட செய்வாயாக !


இறுதிநாளின் உஷ்ணத்தினால் எங்கள் உடல்கள் எரியும் போது குளிர்ந்த காற்றுடன் நேசரின் அருகில் இருந்திட செய்வாயாக !


எங்கள் நன்மை தீமைகளின் பட்டோலைகள் திறக்கப்படும் போது உன் அடிமைகளின் பிழைகளை மறைத்து கொடுப்பவருடன் இருந்திட செய்வாயாக !


எங்கள் பாவங்களினால் கண்கள் கண்ணீர் சிந்தும் வேளையிலே

புன்னகைக்கும் நேசரைடைய இதழ்களின் 'துஆ'-வை கொண்டு அருள்வாயாக !


Source: Hadai Ke Bakshish

Ahmad Raza Khan Alahi Rahma


தமிழ்  - இஸ்லாமிய கவிதைகள் & இலக்கியங்கள்  - இமாம் அஹ்மத் ரஸாகான் கவிதைகள்