MAIL OF ISLAM

Knowledge & Wisdom



இமாம் ஹுசைன் மற்றும் இமாம் ஹசன் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்களும் அல்லாஹ்வின் முடிவும்


ஒரு முறை இமாம் ஹுசைனார் அவர்களும் இமாம் ஹசனார் அவர்களும் ஒரு குறிப்பேட்டில் சில சொற்களை எழுதிக்கொண்டு இருவரும் தத்தந் கையெழுத்து தான் அழகு என்று கூறிக்கொண்டு இருந்தார்கள்.


அவ்விருவருமே கடைசி வரையில் சமாதானம் ஆகவில்லை. இமாம் ஹசனார் அவர்கள் கூறினார்கள் ஒ ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹு) அடம் பிடிக்காதே. நாம் இருவரும் பாட்டனாரிடம் போய் கேட்போம். அவர்கள் கூறட்டும் உன்னுடைய கையெழுத்து அழகானதா இல்லை என்னுடைய கையெழுத்து அழகானதா என்று. இமாம் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு இதற்கு சம்மதித்தார்கள்.


இரு சிறுவர்களும் தன்னுடைய பாட்டனார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருச்சன்னிதானதிற்கு வருகை புரிந்தார்கள்.


இமாம் ஹசனார் அவர்கள் கூறலானார்கள்...


என் அருமை பாட்டனாரே தாங்களே இதை பாருங்கள் என்னுடைய கையெழுத்து தானே அழகாக இருக்கின்றது. என் தம்பி (இமாம்) ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹு) தன்னுடைய கையெழுத்து தான் அழகாக இருக்கின்றது என்று அடம் பிடிகின்றார். நீங்களே கூறுங்கள் யா ரசூல்லுல்லாஹ்.


இதை கூர்ந்து கவனித்த இமாம் ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் இல்லை இல்லை நான் ஒத்துக்கொள்ளமாட்டேன், தாங்களே பாரும் யா ரசூல்லுல்லாஹ் என்று தன்னுடைய கையெழுத்தை காண்பித்தார்கள். நாயகம் அவர்களோ தன்னுடைய இரு பேரக்குழந்தைகளின் தந்தையான சையதினா அலி கர்ரமல்லாஹு வஜ்ஹஹுல் கரீம் அவர்களிடம் சென்று கேட்குமாறு கூறினார்கள்.


இரு குழந்தைகளும் தன்னுடைய அன்பு தந்தையிடம் சென்று கூறினார்கள். எங்கள் தந்தையே இவற்றில் யாருடைய கையெழுத்து அழகாக இருக்கின்றது எழுதிய குறிப்பேட்டை காண்பித்தவாறே கேட்டார்கள்.


தன்னுடைய வாழ்வில் பலப்பல குழப்பமான நிலையை மிக எளிதாக தீர்வுகளையும் முடிவுகளையும் எடுத்த அந்த அல்லாஹ்வின் புலி இதைக்கண்டு தயக்கம் அடைந்தார்கள். இருவரின் கையெழுத்தும் அழகாக இருந்தும் தன்னுடைய எந்த ஒரு பிள்ளையின் மனதையும் புண்படுத்தகூடாது என்று எண்ணி நிலைமையை சமாளிக்க தன்னுடைய அன்பு மனைவி சையதா பாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை நோக்கி இரு பிள்ளைகளையும் செய்கை காட்டினார்கள்.


என் அருமை பிள்ளைகளே இருவரின் கையெழுத்தை பற்றி உங்கள் அம்மா அவர்கள் கூறுவார்கள். அவர்களிடம் சென்று கேட்கவும் என்று சொன்னார்கள்.


சையதா பாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் இதை பார்த்துவிட்டு தன்னுடைய தந்தையான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சபைக்கு செல்லுமாறு கேட்டுக்கொன்றார்கள்.


இந்த உலகில் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தவிர முடிவு எடுப்பதிலும் தீர்ப்பு வழங்குவதிலும் அவர்களை யாரும் மிஞ்சமுடியாது. (RasoolAllah Sallallahu Alaihi wa Sallam, the greatest and most exalted decision maker in the world)


முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். என் அருமை குழந்தைகளே உங்களில் எவர் மனதையும் புண்படுத்த கூடாது என்பதற்காக. உங்களின் இந்த பிரச்சனைக்கு ஹஸ்ரத் ஜிப்ரில் அமீன் அலைஹி ஸலாம் அவர்கள் தீர்வு கூறுவார்கள் என்றார்கள்.


சற்று நேரத்தில் ஹஸ்ரத் ஜிப்ரில் அமீன் அலைஹி ஸலாம் அவர்கள் விஜயம் புரிந்தார்கள். யா ரசூல்லுல்லாஹ் தங்களின் மீதும் தங்கள் குடும்பத்தின் மீதும் சாந்தியும் சமாதானமும் ஏற்படுவதாக.


இமாம் ஹசன் மற்றும் இமாம் ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்களின் இந்த பிரச்சனைக்கு அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான். நான் சொர்கத்திலிருந்து ஒரு பழத்தை கொண்டு வந்துள்ளேன். இதை நான் சற்று மேல உயர வீசுகின்றேன் எவருடைய குறிப்பேட்டில் இந்த பழமானது விழுகின்றதோ அவர்களே வெற்றி பெற்றவர்கள். அவர்களின் கையெழுத்து தான் அழகாமது என்று கூறினார்கள்.


பழத்தினை மேல தூக்கி எறிந்த பொது அது காற்றில் தானாகவே இரு துண்டுகளாக பிளந்து அவற்றில் ஒரு துண்டு சையதினா இமாம் ஹசன் அவர்களின் குறிப்பேட்டில் மேல் விழுந்தது. மற்றொண்டு சையதினா இமாம் ஹுசைன் அவர்களின் குறிப்பேடின் மீது விழுந்தது.


அல்லாஹ்வின் தீர்ப்பின் படி இருவரின் கையெழுத்தும் அழகனதாம் என்று கூறி ருஹுள் அமீன் அவர்கள் விடை பெற்றார்கள்.


இரு குழந்தைகளின் உள்ளமும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கியது. புன்சிரிப்புடன் இரு குழந்தைகளை எல்லோரும் கண்டு மகிழ்தனர்.


Source: Khuthbaathe Muharram, Mufti Mutiyul Musthafa, Haasan - India