MAIL OF ISLAM

Knowledge & Wisdom



குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய அதபுகள் - பகுதி - 2 அல் –ஆதாப் - நடைமுறை ஒழுக்கங்கள்


இஸ்லாம் என்பது ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம். குழந்தை பிறந்ததில் இருந்து அது மரணித்து கப்ரில் வைக்கப்படும் வரை உள்ள அனைத்து கருமங்களுக்கான ஒழுங்கு முறைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது அல்குர்ஆன் மூலமாகவும், நபிமொழிகள் மூலமாகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அவற்றை நாம் பின்பற்றி முறையாக செயற்படும் போது அவை இபாதத்துக்களாக எமது பதிவேட்டில் பதியப்படுகின்றன.



பிறர் வீட்டில் உணவருந்தச் செல்லும்போது கவனிக்க வேண்டியவை


1. உத்தரவு கேட்டு ஸலாம் கூறி நுழையவேண்டும்.


2. அழைக்கப்பட்டவர்கள் மாத்திரம் செல்லவேண்டும்.


3. ஏற்கனவே கூறப்பட்ட ஒழுங்கு முறைகளைப் பேணி உண்ணவேண்டும்.


4. குறையேதும் கூறக்கூடாது உதாரணமாக உப்பைக்கூடக்கேட்கக் கூடாது.


5. உணவைப் பாத்திரங்களில் சிறிதளவு மீதம் வைப்பது ஏற்றமானது.


6. விருந்துண்டபின் ஓதும் துஆக்கள்:


அல்லாஹும்ம பாரிக் லனா fபீஹி வ அத்இம்னா கைரன் மின்ஹு.


அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

ஆதாரம்: அபூதாவுத்



அடுத்தவர்களின் வீட்டில் நோன்பு திறந்தபின்


அfப்தர இந்தகுமுஸ் ஸாஹிமூன வ அகல தொஆமகுமுல் அப்ராறு வஸல்லத் அலைகுமுல் மலாஇகது


அறிவிப்பவர்: அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

ஆதாரம்: அபூதாவுத்


விருந்து முடிந்த பின்னர் தாமதிக்காமல் அவ்விடத்தை விட்டுச் செல்லுதல் நல்லது.



விருந்து வீட்டார் பிறரை வரவேற்கும் முறைகள்


1. விருந்தாளிகளை புன்னகையோடு வரவேற்றல்.


2. அவர்களைத் திருப்தியாக உபசரித்தல்.


3. இறுதியாக வாசல் வரை சென்று வழியனுப்புதல்.

மேலும் பல இஸ்லாமிய குடும்ப வாழ்க்கை சம்பந்தமான கட்டுரைகளை வாசிக்க :  www.womanofislam.com