MAIL OF ISLAM

Knowledge & Wisdom




முக்காலத்தின் அரசன்

***********************************


அண்ட கோளங்களும் அழிந்திடுமே

அழியாதுந்தன் திருமுகமே !

ஆற்றலும் அசைவும் உனையன்றி

வேறில்லை இங்கே ரஹ்மானே !


இவ்வுலகும் ஏழுவானங்களும்,

அதிலடங்கும் உயிர்கள் அத்துணையும்

உண்னாட்சியை கொண்டே நிகழ்கிறதே

முழுமதியும் உன்னை தொழுகிறதே !


ஈர்ப்பால் புவியை நிலைத்தாட்டி

அதன் சுழற்ச்சியால் காலங்களை பலதாக்கி

இருவிளக்கை வானில் ஒளியாக்கி

வான்மழையை நிலத்திற்குயிராக்கி !

பற்பல மாயம் செய்கின்றாய்

மறைவாய் யாவும் அருள்கின்றாய் !


ஊனும் துயிலும் இல்லாமல்

வாரி வழங்குவதால் கரமும் வற்றாமல்

மாண்பாய் ஆட்சி செய்கின்றாய்

முக்காலத்தின் அரசாய் இருக்கின்றாய் !


புகழுக்குரிய பூமான் நபி ﷺ

********************************************


அருளாளனின் அருட்கொடையே

எங்கள் அகம் நிறைந்த அஹமதே !

ஆருயிரும் இருவிழியும்

தங்களை காண வாடுதே !


இவ்வுலகம் சீர்பெற

அரும்பாடு பட்டீர்கள் !

ஈருலகில் ஈடேற்றம்

நாங்கள் காண வந்தீர்கள் !


உருவமில்லா இறையவனின்

திருச்சொல்லை மொழிந்தீர்கள் !

ஊரெல்லாம் இம்மார்க்கம்

சென்றடைய வென்றீர்கள் !


எத்திசையும் கொடிப்பறக்க

அயராது உழைத்தீர்கள் !

ஏழ்மையின் மறுப்பெயராய்

வாழ்வெல்லாம் களித்தீர்கள் !


ஐங்காலத் தொழுகையிலும்

எங்களுக்கே அழுதீர்கள் !

ஒப்பற்ற ஓரிறையின்

தனித்துவம் சொன்னீர்கள் !


ஓரிறையின் கட்டளைக்கே

தன் வாழ்வை கொண்டீர்கள் !


தங்கள் மீது சாந்தி உண்டாக !

தங்கள் குடும்பத்தினர் மீது சாந்தி உண்டாக !

தங்கள் தோழர்கள் மீதும் சாந்தி உண்டாக !

ஒப்பில்லா ஓரிறையின் பால் என் கரமேந்துகிறேன்.


கருணையின் உறைவிடமே காருண்ய நபி

***********************************************************************


கருணையின் உறைவிடமே

காருண்ய நபி காசிமே;

எங்ஙனம் காண்பேனோ

தங்களின் திருமுகமே !


சங்கையான இறைச்சொல்லை

செம்மையாக மொழிந்தீர்கள்;

ஞானத்தின் மறுஉருவாய்

பூவுலகு வந்தீர்கள் !


சுடர்விட்டு தீன்ஒளிக்க

அரும்பாடு பட்டீர்கள்;

எண்ணமெல்லாம் சீர்பெறவும்

போதனைகள் தந்தீர்கள் !


தவமே வாழ்வாய்கொண்டு

தடைகளை தகர்த்தீர்கள்;

நாற்பதாம் வயதடைய

நபித்துவம் அடைந்தீர்கள் !


அய்யமேதும்மில்லாமல் போர்

பல கண்டீர்கள்;

இரவுகளும் அயராமல்

ஓரிறையை தொழுதீர்கள் !


நிலவதிலும் கலங்கமுண்டு

தங்களிடம் இல்லையே;

மலரதிலும் காணாத

எழிலகு கொண்டீர்கள் !


வழங்குவதில் வள்ளலே

சீர்மிகு செம்மலே;

நாடிவந்த மாந்தர்க்கெல்லாம்

நற்செய்தி சொன்னீர்கள் !


ஆழ்கடலின் முத்துகளும்

அதிலடங்கும் அதிசயமும்;

அனைத்துமே அற்பமே

தங்கள் முன் சொற்பமே !


இளம்பிறையும் கதிரவனும்

ஒளிச்சுடரும் விண்மீணும்;

தங்கள் முகம் கண்டதால்

இவ்வழகு கொண்டதோ !


பாருலகும் மானிடனும்

பன்னிரண்டு மாதங்களும்;

காலமெல்லாம் புகழ்ந்தாலும்

எட்டாத புகழடைந்தீர்கள் !

ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்



அருளாளனின் பேரொளியில் தோன்றிய திருத்தூதே

**********************************************************************


அருளாளனின் பேரொளியில்

தோன்றிய திருத்தூதே !

அண்டமும் தோன்றியது

தங்களின் பேரொளியிலே !


விழியிரண்டின் காட்சிகள்

பொய்யாக தோன்றுதே !

மெய் காட்சி தாருங்கள்

மஹ்மூது நபிகளே !


சுவாசிக்கும் இடைவெளியும்

நறுமணம் வீசுதே !

தங்கள் திருமுகம் தேடி,

விழியுறங்க மறுக்குதே !


முழுமதியும் தங்களைத்தேடி,

தினம் தினம் தேயுதே !

மாமலைகளும் அழுவதால்,

நீர் நதியாய் ஓடுதே !


தோகை விரித்தாடும்

வண்ண மயிலும் நாணிடுமே !

தங்கள் திருமேனி கண்டால்,

அதன் கர்வமும் அழிந்திடுமே !


குயில் பாடும் கவிகளும்

தங்கள் அருமை கூறுதே,

என் புலமை போதவில்லை

தங்கள் பெருமை கூறவே !


...ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்..

தமிழ்  - இஸ்லாமிய கவிதைகள் & இலக்கியங்கள்  - முஹம்மத் இப்ராஹிம் கவிதைகள்