MAIL OF ISLAM

Knowledge & Wisdom



முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் - வெளிப்பாட்டின் கிரீடம்


முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் முதன்மை மற்றும் இறுதியின் கிரீடம் என்ற தலைப்பின் தொடர்ச்சியாக...


முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் வெளிப்படையில் எவ்வாறு கிரீடம் சூட்டப்பட்டு இருக்கின்றார்கள் என்பதை அறியலாம்.


இப்போது வெளிப்படையிலும் அந்தரங்கத்தையும் காண்போமானால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் எல்லோருக்கும் வெளிப்படையாக உள்ளார்கள், என்டேன்றும் வெளிப்படையாக உள்ளார்கள்.


நம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் எவ்வாறு வெளிப்படையாக உள்ளார்கள் என்றால் எல்லா முஸ்லிம்களும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அன்னவர்களை அறிந்தவர்களாக இருக்கின்றார்கள், காபிர்களும் நம் நபி அவர்களை அறிந்து வைத்துள்ளார்கள்.


"யாரி Fஃuநஹு கமா யாரிFஃuன அப்னாஹஹும்" நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை (குழந்தை, மகன், பிள்ளை) என்ற எடுத்துக்காட்டினை கொண்டு கூற வேண்டாம். ஏனெனில் தந்தை தனது மகனை 3 விடயங்களை கொண்டும், மகன் தனது தந்தையை தாயின் அல்லது மற்றவர்கள் மூலம் அடையலாம் காட்ட படுகின்றான்.


தந்தை தன்னுடைய நிக்காஹ், ஹமல் மற்றும் அக்குழந்தையின் பிறப்பினை கொண்டு அடையாளம் காண்கின்றார். காபிர்கள் நம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை ஆதாரங்களை கொண்டு அறிகிறார்கள்.


தந்தை தன்னுடைய பிள்ளையை பிறப்பிற்கு பிறகு மட்டும் அறிந்து கொள்ளுவதில்லை. பிறப்பின் முன்பே அறிந்து கொள்கிறார்.


அதே போல் காபிர்கள் நம் நபிகளாரின் வருகைக்கு முன்பே அறிந்து இருந்தார்கள் அவர்களின் வருகைக்காக வேண்டி நிற்கவும் செய்து இருந்தார்கள்.


குழந்தை பிறந்தவுடன் தன்னுடைய தந்தையை அறிந்து கொள்ளுவதில்லை, புரிந்து கொள்ளும் வயதினை அடைந்தப்பின் தன்னுடைய தந்தையை குழந்தை விளங்கிகொள்கிறது. ஆனால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் பிறந்த போதே நபித்துவத்தின் எல்லா அறிகுறிகளும் தென்பட்டிருந்தன.


மலைகள் ஸலாம் கூறின, கற்கள் வரவேற்றன, மரங்கள் நடந்து வந்து நிழல் கொடுத்தன. சந்திரன் நம் நபிகளாருடன் பேசியது. காபிர்கள் நுபுவத்தின் செய்திகளை கூறிக்கொண்டு இருந்தார்கள்.


விலங்குகள் அறிந்தன, ஒட்டகங்கள் சஜ்தா செய்தன, காட்டு மான் பாதுகாப்பு தேடியது, சந்திரனும், சூரியனும் அறிந்தன.


சந்திரனோ நம் நபிகளாரின் செய்கையினால் பிளந்து மீண்டும் ஒன்று சேர்ந்தது. மறைந்த சூரியன் நபிகளாரின் செய்கையால் மீண்டும் திரும்பியது. இதெல்லாம் நம் நாயக கண்மணியின் செய்கையில் நடந்த மௌஜூஜாக்கள் (அதிசியங்கள்) ஆகும் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்.


இப்புவியில் உள்ளவர்கள் அறிந்துகொண்டார்கள், அர்ஷில் உள்ளவர்கள் புரிந்து கொண்டார்கள், ஹஸ்ரத் ஆதம் அலைஹி சலாம் அவர்கள் தன்னுடைய கண்களை திறந்தவுடன் அர்ஷில் அல்லாஹ் சுபானஹுதாலவின் திருப்பெயருக்கு அருகில் அல்லாஹ்வின் ஹபிபுடைய பெயரினை கண்டார்கள்.


சொர்க்கத்தில் உள்ளவர்களும் அறிந்தார்கள், நரகில் உள்ளவர்களும் அறிந்தார்கள், சொர்கத்தின் ஒவ்வொரு இலைகளிலும், ஹூர்னையின் பெண்களின் கண்களிலும், அல்லாஹ்வின் அடிமைகளின் உள்ளங்களிலும் மற்றும் எல்லா படைபினங்களிலும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அன்னவர்களின் திருப்பெயர் பொறிக்கபட்டுள்ளது.


நரகில் இருப்பவர்கள் கூறுகிறார்கள் "காலூ அலம் Na'ku மிநல் முசல்லின். அவர்களும் அறிகிறார்கள் ஸையதுல் ஆழம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை அழைக்கலாம் அதாவது அல்லாஹ்வினுடைய திக்ர் என்ன்கெல்லாம் உள்ளதோ அங்கு ரசூல்லுல்லாஹ்வினுடைய திக்ர் இருக்கும்.


அனைத்து படைப்பினங்களின் மீது ரசூல்லுல்லாஹ்வின் நூர் மற்றும் ஒவ்வொரு இடத்திலும் ரசூல்லுல்லாஹ்வின் கருணை மற்றும் கியாம நாள் வரைக்கும் நம் கண்மணி நாயகம் அவர்களின் சிறு சிறு விஷயங்களும் அனைவரும் அறிவர்.


நம் நபிகளாரின் வாழ்கை முறை, அவர்களின் பிறப்பின் பிறகு நம் நபிகளார் பால் அருந்தியது, வளர்ந்தது, நுபுவதினை பிரகடனம் செய்தது, நபிகளாரின் குடும்ப வாழ்கை முறை, அவர்கள் பட்டினியாய் இருந்தது, அவர்கள் தூங்கியது, தூங்காமல் விழித்து இருந்தது, உணவு அருந்தியது என்ற நம் நபிகளாரின் ஒவ்வொரு விடயத்தையும் வெளிப்பாடாக இன்றும் உள்ளது.


அரபு கண்டத்திலும் வெளிபாடு, மற்ற கண்டங்களிலும் வெளிப்பாடு இவ்வாறு எங்கு நாம் சென்றாலும் நபிகளார் அவர்கள் வெளிப்படையாக இருக்கின்றார்கள். நம் நபிகளாரை அறியாத எந்த ஒரு படைப்பினமும் இல்லை.


" ரசூல்லுல்லாஹ் மதினாவில் இருப்பதாக கூறுகிறார்கள்


இல்லை இல்லை இறைக்காதலர்களின் நெஞ்சங்களில் இருக்கின்றார்கள்" !!!


ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்


அதே போல் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் விண்ணுலக பயணம் மேற்கொள்ளும் போது எல்லா படைப்பினங்களையும் கண்டார்கள் என்றால். பின்பு எது தான் நாயகம் அவர்களை அறியாது இருக்க முடியும்?


இமாம் அஹமத் ரழா காஃன் அலைஹி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் நம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை புகழ்பாடுகிறார்கள்.


யா ரசூல்லுல்லாஹ் ! தங்களுக்கு ஏது மறைவு என்ற ஒன்று உள்ளது ?

தாங்கள் இறைவனையே நேரில் தரிசனம் செய்தவர் ஆயிற்றே !

உங்கள் மீது கோடான கோடி சலவாத் உண்டாவதாக.....


ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்....!!!



உர்து மூலம்: ஹகீமுல் உம்மத் முப்தி அஹமத் யார் காஃன் நயமி பாதாயுனி ரஹ்மத்துல்லாஹி அலைஹி

ஷான் எ ஹபிபுர் ரஹ்மான் மின் ஆயதில் குர்ஆன் என்ற நூலிலிருந்து...

Shaan e Habibur Rahman Min aayathil Quran (Praise of Rasoollullah from Quraan sharif)