MAIL OF ISLAM

Knowledge & Wisdom




சுத்தம் என்றால் என்ன?


சுத்தம் ஈமானில் பாதி என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள். சுத்தம் மூன்று வகைப்படும்.


1. உடல் சுத்தம்


2. உடை சுத்தம்


3. இடம் சுத்தம்


இம்மூன்று வகை சுத்தமும் செய்து கொள்ளாவிடில், தொழுகையை நிறைவேற்ற முடியாது.




வுழுவின் ஷர்த்துக்கள் என்ன?


வுழுவின் ஷர்த்துக்கள் 6 அவையாவன:


1. முஸ்லிமாகயிருத்தல்.


2. பகுத்தறிவும், புத்தியுள்ளவனாக இருத்தல்.


3. வுழு பர்ளு என்று அறிதல்.


4. வுழுவின் முறைகளை எல்லாம் அறிந்திருந்தல்.


5. வுழுச் செய்வதற்கான துப்புரவான தண்ணீரை தேடுதல்.


6. வுழுச் செய்யும் பர்ளான உறுப்புகளில் தண்ணீர் படாமல் தடை செய்யக்கூடிய தார், சுண்ணாம்பு, சந்தனம், மெழுகு, மீன் செதில், கடதாசி தாள் போன்ற ஏதும் ஒட்டியிருந்தால் அவற்றை நீக்கி கொள்ளுதல்..


வுழுவின் பர்ளுகள் என்ன?


வுழுவின் பர்ளுகள் 6 அவையாவன:


1. வுழுவின் கடமைகளை நிறைவேற்றுகிறேன் என்று

    நிய்யத்து செய்தல்.


2. அந்த நிய்யத்துடன் முகத்தை கழுவுதல்.


3. இரு கைகளையும் (முழங்கை உட்பட) கழுவுதல்.


4. தலையில் சில பகுதியை தண்ணீரால் தடவுதல்.


5. இரு கால்களையும் கரண்டையுட்பட கழுவுதல்.


6. மேலே கூறப்பட்ட ஒழுங்கு தவறாது ஒன்றன்பின்

     ஒன்றாக செய்தல்.




வுழுவின் சுன்னத்துக்கள் என்ன?


வுழுவின் சுன்னத்துக்கள் 14 அவையாவன:


1. கிப்லா பக்கம் முகம் நோக்குதல்.


2. வுழு செய்கிறேன் என்று நினைத்தல்.


3. பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம் என்று ஓதிக்

    கொள்ளுதல்.


4. இரு கைகளையும் மணிக்கட்டுவரை கழுவுதல்.


5. பற்களை சுத்தம் செய்தல்.


6. வாய் கொப்பளித்தல்.


7. வாயுடன் நாசிக்கும் நீர் செலுத்துதல்.


8. முகம் கழுவும் போது தாடியை குடைந்து கழுவுதல்.


9. வலது பாகத்தை முதலில் கழுவுதல்.


10. தலை முழுவதையும் மஸ்ஹு செய்தல்.


11. இரு காதுகளையும் மஸ்ஹு செய்தல்.


12. காலின் விரல்களை கோரிக் கழுவுதல்.


13. ஒவ்வொரு உறுப்புகளையும் மூன்றுமுறை கழுவுதல்.


14. கழுவிய உறுப்புக்கள் காய்வதற்கு முன் உறுப்புகளை

      கழுவுதல்.


வுழுவை முறிக்கும் காரியங்கள் எவை?


வுழுவை முறிக்கும் காரியங்கள் 5 அவையாவன:


1. முன் துவாரத்தால் அல்லது பின் துவாரத்தால் இந்திரியம் நீங்கலாக மற்றதேனும் வெளியாகுதல்.


2. பித்தட்டு பூமியில் நன்கு சரியாக அமையாமல், நித்திரை செய்தல்.


3. அபத்தில் (மர்ம ஸ்தானம்) கையின் உட்புறம் படுதல்.


4. சுய உணர்வு இல்லாமல் போகுதல்.


5. தனக்கு விவாகம் செய்ய தகுமான மாதரை திரையின்றி தொடுதல்.




வுழு இல்லாமல் செய்யகூடாத காரியங்கள் எவை?


வுழு இல்லாதவர்கள் செய்யகூடாத காரியங்கள் 3 அவையாவன:


1. தொழுதல்.


2. குர்ஆனை தொடுதல்.


3. மக்காவிலுள்ள கஃபதுல்லாஹ் என்னும் அல்லாஹ்வின் புனித ஆலயத்தை தவாபு செய்தல் (வலம் வருதல்)




தயம்மம் செய்வதன் விபரம்


தயம்மம் என்றால் வுழு அல்லது குளிப்புக்குப் பதிலாக புழுதி மண்ணால் செய்யப்படும் தூய்மையாகும். வுழு செய்து கொள்வதற்கோ, அல்லது கட்டாயமான குளிப்பை நிறைவேற்றிக் கொள்ளவோ தண்ணீரை உபயோகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு நோய் ஏற்பட்டிருந்தாலும் அல்லது தண்ணீரை உபயோகித்தால் நோய் கூடுதலாகி விடும் என அஞ்சினாலும் அல்லது தன்னிடமுள்ள தண்ணீரைக் கொண்டு மேற்படி வுழு குளிப்புக் கடமைகளை நிறைவேற்றி விட்டால் தனக்கோ அல்லது தனது வாகனமாகிய பிராணிக்கோ குடிப்பதற்குத் தண்ணீர் இல்லாமல் போகுமெனப் பயந்தாலும் உரியவிலை கொடுத்தான் தண்ணீர் வாங்க முடியாவிட்டாலும் தயம்மம் செய்து கொள்ளலாம். தயம்மத்தால் புரியப்பட்ட வணக்கங்களைத் தண்ணீர் கிடைத்த பிறகு கழாச் செய்ய வேண்டிய அவசியமில்லை.


தயம்மமின் ஷர்த்துக்கள் என்ன?


தயம்மமின் செய்வதற்கு நிபந்தனைகள் 7 அவையாவன:


1. தயம்மம் செய்ய வேண்டிய வஸ்து மண்ணாக இருத்தல் வேண்டும். சுண்ணாம்பு, சீமெந்தி, மாவு, தனி   மணலாக இருக்கக் கூடாது.


2. அந்த மண் சுத்தமானதாக இருத்தல்.


3. முன்னர் தயமத்திற்கு உபயோகிக்கப்படாததாக அந்த மண் இருத்தல்.


4. அம்மண் புழுதி உள்ளதாக இருத்தல்.


5. அந்தந்த நேரம் வந்தபின் அந்தந்த வக்துக்காக தயம்மம் செய்தல்.


6. தண்ணீர் உபயோகிக்க வாய்ப்பில்லாமல் இருத்தல்.


7. தயம்மத்திற்கு முன் உடம்பிலுள்ள அசுத்தங்களைச் சுரண்டித் தேய்த்துக் கழுவுதல்.




தயம்மமின் பர்ளுகள் என்ன?


தயம்மமின் பர்ளு 7 அவையாவன:


1. தொழுகையை அல்லது கஃபாவை தவாபு செய்வதை (எதை நினைக்கிறானோ அதை) ஆகுமாக்கத் தேடுகிறேன் என்று மண்ணில் இருகைகளையும் அடிக்கும் போதே நிய்யத்துச் செய்தல்.


2. மண்ணை நாடுதல்.


3. அந்த மண்ணைத் தன் கைகளாற் தடவிச் செப்பப்படுத்தல்.


4. முந்திய அடியாள் முகத்தைத் தடவிக் கொள்ளுதல்.


5. இரண்டாம் அடியால் இரு கைகளையும் முழங்கை உட்பட தடவிக் கொள்ளுதல்.


6. மேற்கூறியவைகளை வரிசைக் கிராமமாகச் செய்தல்.


7. முகத்திற்கு ஓர் அடியும், கைகளுக்கு ஓர் அடியும், அந்த மண்ணில் இரண்டு அடிகள் தனித்தனியாக அடித்தல் வேண்டும்.


தயம்மமின் சுன்னத்துக்கள் என்ன?


தயம்மமின் சுன்னத்துக்கள் 6 அவையாவன:


1. கைகளை மண்ணில் அடித்துப் பிறகு இரு புறங்கைகளாலும் தட்டிவிடுதல்.


2. ஆகுமாக்கத் தேடும் செயலை வாயால் உரைத்தல். உதாரணமாக தொழுகையை ஆகுமாக்குகிறேன் என்றோ, அல்லது கஃபாவை தவாபு செய்ய ஆகுமாக்குகிறேன் என்றோ வாயாற் கூறுதல்.


3. இவ்வாறு கூறிய பின் “பிஸ்மில்லாஹ்” கூறுதல்.


4. தடவும்போது வலது கையை முதலாவதாகத் தடவுதல்.


5. முகத்தை மஸ்ஹு செய்தபின் சுணக்கமின்றிக் கைகளுக்கு மஸ்ஹு செய்தல்.


6. கைகளுக்கு மஸ்ஹு செய்யும்போது இடது கையின் பெருவிரளைத் தவிர மற்ற விரல்களில் உட்புறத்தை வலது கைவிரல்களின் முதுகுப்புறத்தில் (மேற்பகுதியில்) வைத்தவண்ணம் முழங்கை வரை தடவி அதன் பின் இடதுகையின் உள்ளங்கையை வளதுகையின் உட்பாகத்தில் (கீழ்ப்பகுதியில்) தொட்டவண்ணம் மணிக்கட்டுவரை தடவுதல், பின்னர் இடது கைப்பெருவிரலை வலதுகைப் பெருவிரலின் மேற்பாகத்தில் தடவுதல் இதேவிதமாக இடதுகைக்கும், வலது கையால் தடவ வேண்டும்.




தயம்மத்தை முறிக்கும் காரியங்கள் எவை?


தயமத்தை முறிக்கும் காரியங்கள் 7அவையாவன:


1. வுழுவை முறிக்கும் ஐந்து காரியங்கள்.


2. தண்ணீரில்லாதவன் அதனைப் பெற்று விடுதலும் அதை உபயோகிக்க இயல்பிருத்தலும்.


3. இஸ்லாத்தை விட்டும் மதம் மாறிப் போகுதல்.