MAIL OF ISLAM

Knowledge & Wisdom



அன்பர்கள் உங்கள் சொந்த கவிதைகளை admin@mailofislam.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். ​அவை இப்பகுதியில் பிரசுரிக்கப்படும். 

"ரசூல் அடிமை" சபிக் சேக் முஹையதீன் சாஹிப்


யா ரசூலுல்லாஹ் உங்கள் திருமுகம் காண ஆவல் கொண்டோம்


ராகம் :ரப்பி வர்ஜுகுணா ஜியரதஹு


எங்கள் உயிரே யாரசுலல்லாஹ்!

உங்கள் திருமுகம் காண ஆவல் கொண்டோம்

உங்கள் திருமுகம் காண ஆவல் கொண்டோம்

ஒருமுறை வருவீர் எஜமானே

(எங்கள் உயிரே )


முழு மதி இல்லா வானம் போல்

எங்கள் வாழ்கை இருளீல் துடிக்கிரதே

உங்கள் முழு மதி முகத்தை

ஒரு தடவை காண வரம் தர வேண்டும் எஜமானே!

நீங்கள் வரம் தர வேண்டும் எஜமானே!

உங்கள் அருள் பெற வேண்டும் எஜமானே

(எங்கள் உயிரே )


ஆதவன் ஒளி முன் பனி உருகும்

உங்கள் பார்வையினால் பாவம் மரையும்

அந்த பார்வையிலே நன்மை பெருகும்

இந்த பாவியை பாருங்கள் எஜமானே!

இந்த பாவியை பாருங்கள் எஜமானே!

உங்கள் பதையில் சேருங்கள் எஜமானே

(எங்கள் உயிரே )


வான் மழையே மன்னின் வளம்

உங்கள் அருள் மழையே அடியான்கு ஜெயம்

உங்கள் திரு கரமே சுவர்கத்தின் வலி

அந்த கரத்தினால் பற்றுங்கள் எஜமானே

அந்த கரத்தினால் பற்றுங்கள் எஜமானே

உங்கள் பாதத்தை முத்தனும் எஜமானே

(எங்கள் உயிரே )


இறையோனே வல்ல ரஹ்மானே

அண்ணல் நபி முகத்தை காணும் நசிபை

எங்கள் உயிர் முகத்தை காணும் நசிபை

நீ தருவாயே வல்ல யா அல்லா

நாங்கள் வேண்டுகிறோம் வல்ல யா அல்லா

எங்கள் வாழ்கை முழுவதும் நபி மீது

ஸலவாத் ஓதும் பாக்கியம் தந்துடுவாய்


சல்லல்லாஹு அலா முஹம்மது

சல்லல்லாஹு அலைஹி வ சல்லம்

சல்லல்லாஹு அலா முஹம்மது

சல்லல்லாஹு அலைஹி வ சல்லம்

சல்லல்லாஹு அலா முஹம்மது

யா ரப்பி ஸல்லி அலைஹி வசல்லிம்


உங்களை யன்றி நபி அன்பை நாங்கள்

எப்படி அடைவோம் எஜமானே

எங்கள் அன்பை நபி இடத்தில்

நீங்கள் சேர்த்திடுங்கள் அப்துல் காதிரே

நீங்கள் சேர்த்திடுங்கள் அப்துல் காதிரே

என்னை பார்த்திடுங்கள் அப்துல் காதிரே

(யா முஹையதீன் ஜிலானி எம்மை ஆண்டருவீர் மகாராசரே

எம்மை ஆண்டருவீர் மகாராசரே அஹ்மத் நபி திரு பேரரே)


உங்கள் கை அப்துல் காதிரிடத்தில்

அப்துல் காதிரின் கை நபி நாதரிடத்தில்

உங்கள் இன்னொரு கையை அடிமைக்கு

நீங்கள் தந்தருள்வீர் எங்கள் எஜமானே

நீங்கள் தந்தருள்வீர் எங்கள் எஜமானே

என்னுள் வந்தடைவீர் எஜமானே

(நாகூரில் யாழும் கோமானே

எங்கள் உள்ளதில் வாழும் எஜமானே

நபி நாதரிடம் சமைந்த சிமானே)



(எங்கள் உயிரே )


குலாம் தஸ்தகீர் எழுதிய


மாநபிக்கு ஒரு மடல்


மதீன மண்ணில் துயில் கொள்ளும் எங்கள் மஹமூதரே! தாங்கள் கண்ட தொல்லைகளும்,கொடுமைகளும்,சமுக அவலங்களும் சொல்லிமாளாது.


சாயம் போன சரித்திர பக்கங்களும் தங்களின் உலர்ந்த உதிர வரலாற்றை காய்ந்திடாமல் இன்னும் வைத்திருக்கிறது

இறையாணை கொண்டு தமக்கு துன்பம் விளைவித்த கொலைகார மக்களை அழிக்க வாய்ப்பு வழங்கிய போதும் "அவர்கள் அறியாதவர்கள் எனக்கூறி அம்மக்களை சபிக்காமல் நேர்வழி பட வழிந்தோடும் குருதி வாய் துடைத்து கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்த தூயோரே! அந்த தூயோனின் இறுதி தூதே!


நாயகமே சகிப்புத் தன்மையின் தாயகமே!

படைப்பினம் அல்லாது படைத்தவனிடம் பாடம் பயின்ற பகுத்தறிவின் பெட்டகமே! உண்மைக்கு உயிர் தந்த உத்தமரே!

மனித பிறவிகளின் மத்தியில் நீங்கலோர் மனிதநேய பிறவி!


பொறுமையே உங்கள் மீது பொறாமை கொண்டது; பொறாமையோ உங்கள் பொறுமை கண்டு அகன்று சென்றது.

வாய்மையும் தங்களிடம் வாழ்வு தேடியதுவலிமையோ வாஞ்சையுடன் துணை நின்றது.


உங்கள் உருவ படத்தை அறிந்தவர் உலகில் எம்மில் இல்லை. உங்களை அறியாதவர் உலக வரைபடத்தில் எவரும் இல்லை.


கலப்பின உறவு அது வெறும் கனவு என எண்ணி உறங்கிய சமுகத்தை சகோதர வீதியில் கைக்கோர்த்து சமமாய் நடக்க செய்த எங்கள் உயிரே! உங்கள் உம்மத்தின் இந்த சமுக நிலை அறிவீரோ...?


வாளேந்திய சமுகத்தை வாய்மையால் செதுக்கியவர் நீங்கள்

வாயே திறக்க கூடாதென வன்முறையால் கூறுபோடும் சமுகத்தில் நாங்கள்


தீண்டாமையை திக்கற்ற திசைக்கு திருப்பியவர் நீங்கள் யாரும் தீண்டினால் அவரை தீக்கு இரையாக்கும் தீய சமுகத்தில் நாங்கள்


அநாதைகளுக்கும் அமானிதங்களுக்கும் வரம்பின்றி அடைக்கலம் தந்தவர் நீங்கள்

அமானிதங்களை திரும்ப கேட்போரை வரம்பு மீறி அனாதைகளாக்கும் வஞ்சக சமுகத்தில் நாங்கள்


வட்டியை மூர்ச்சையாக்கி வணிகத்தை வளமுடன் வாழ செய்தவர் நீங்கள்

வணிக வாயடைத்து வட்டியின் வயிறு வளர்க்கும் வழிகெட்ட சமுகத்தில் நாங்கள்


பெண்ணினத்தை பொன்னென எண்ணி பொத்தி வைக்க சொன்னவர் நீங்கள்

பெண்ணையும்,பொன்னையும் வியாபார பொருளாக்கிய விரச சமுகத்தில் நாங்கள்


பெருங்கல்லும் சிரம் பணிய கண்டீர் நீங்கள்

சிறுக்கல்லுக்கு சிரம் பணிய காத்திருக்கும் பெருங்கூட்ட சமுகத்தில் நாங்கள்


தொண்டர்களை ஒழித்து உயிர் கொடுக்கும் தோழர்களை உருவாக்கியவர் நீங்கள்

தொண்டர்களை ஒழித்து உயிர் எடுக்கும் குண்டர்களை உருவாக்கும் கேவல சமுகத்தில் நாங்கள்


பாவத்தின் சாயல் கூட அறியாதவர் நீங்கள்

பாவ மூட்டைகளை பொதிகளென சுமக்கும் கழுதை சமுகத்தில் நாங்கள்


உங்கள் நிழல் கூட புகழ் மீது விழ மறுத்த மாமனிதர் நீங்கள்.

புகழ்தரா மக்களை நிழல் கொண்டு அழிக்கும் நீதியற்ற சமுகத்தில் நாங்கள்


எளிமையை தோழானாக்கி, பகட்டை பரதேசியாகிய பகலவன் நீங்கள்

எளிமையை ஏளனம் செய்யும் பதவி மோக சமுகத்தில் நாங்கள்


பெருமை - இறை ஆடை அது வேண்டாம் இங்கே நமக்கு என உரக்க கூறினீர்கள் நீங்கள்

அவ்வாடையை அகங்கார அலமாரியில் அழகாய் அடிக்கி உடுத்தி மகிழும் உதாசீன சமுகத்தில் நாங்கள்


மதீனாமக்கள் பலரை புனிதராக்கியது மாநபி

தங்களின் வருகையால் மதீன மண்ணின் புழுதி கூட புனிதமாகியது

எங்கள் இரட்சகனின் தூதர் ரவ்லாவை காண அந்த மதீன புழுதிகளோடு நானும் காத்திருகின்றேன் இறை நாடினால்...


உங்களை வர்ணிக்க வார்த்தைகள் ஏங்குகின்றன.,

வாய்ப்புக்கு மொழிகளும் காத்திருக்கின்றன

நான் என்ன செய்ய? அடியேனுக்கு அவ்வளவே அறிவு!


முதலோனின் இறுதித் தூதே, இறுதி நாளின் முதலாமானவரே. நீங்கள் எங்களோடு இருந்திருக்க கூடாதா...? எல்லாம் வல்லவனின் எண்ணம் தானே எல்லாமாகிறது. உங்கள் மீது சாந்தியையும், சமாதானத்தையும் வல்ல ரஹ்மான் வாரி வழங்குவானாக! உங்களோடு சுவர்க்கத்தில் இருக்கும் நஸிபை எங்களுக்கும் நாடுவானாக!!

அதூப் பாஸி எழுதிய 


மதியை தேடும் இருள்


எம் நெஞ்சினில் தம்மை ஊஞ்சலாய்

நாம் தாங்குகிறோம் எம் கண்ணே ,


பதிலுக்கொரு மதியாகவே

வாரீரோ எம் மாசில்லா மதியே.


கேட்பீரோ தாளத்தை

எம் கவி போட்டிடும் இதயம்


தருவீரோ முடிவொன்றை

தம் மடியோடு ஒரு உதயம்.


நாம் என்ன செய்தோம் தம் உம்மத்தினராக ?

பூமானே,முழு மதியே

எம் வாழ்வில் இவ்விருளை நீக்க

எப்போது வருவீர் ?


எப்பொழுதும் மதியை தேடுகிறது இவ்விருள்.


அதூப் பாஸி எழுதிய 


ஒளிரும் விளக்கு


அடியான் யாரன்று

பொடியனுக்கு ஊற்றி,அவனில் அவனை

படியேற வைத்து,அவன்

நாடித்துடியோடு இறை நினைவை

படிக்க வைத்தீரே யா ஷாதிலி


சங்கை மிகு வாழ்வில்

தங்க ஆஷைகளை நீக்கி

எங்கும் அவனே என்ற உண்மையை

அங்கங்கமாக ஊற்றிநீரே யா ஷாதிலி


கோடிக்கணக்கான

துடிப் பிள்ளைகள் கொண்டீர்,அவர்களுக்கு

நேரான வழியை காட்டி,

சீரான வாழ்விலும் செலுத்தி,

போராளி ஆக்கினீரே யா ஷாதுலி


இறைநன்றியை வாழ்வில் தைத்து

இன்பக்கடலை எம்மில் வைத்து

இதமுடன் வாழ

இரவின் பயனை

இறையிடமிருந்து பெற்று தந்தீரே யா ஷாதுலி


ஆக்கம் : ஸபா


வாகை சூடும் ரமலானே வருக !!!


இஸ்லாமிய ஐம்பெரும் பிள்ளையின்

நான்காவது பிள்ளை ரமலானே

வருக.............வருக...........!


பாவங்களில் திளைத்திருந்த

மானிடர்களின் பாவங்களை

கலைத்து

வாகை சூடவந்த ரமலானே

உன் வருகை மகத்துவமானது....!

வருக.....ரமலானே..வருக..!


நோன்பு பூ தொடுப்பவருக்கு

உன் அருள் வாசலை திறந்து கொடுத்து

வாகை சூடவந்த ரமலானே

உன் வருகை மகத்துவமானது..!

வருக ....ரமலானே..வருக..!


மனம்போன போக்கில்

களியட்டங்களின்றி

இப்பொன்னாளில் மனதுக்கு கடிவாளமிட்டு

தீச் செயல்களைவிட்டு தூரமாக்கி

இறையன்மையைத் தேடவைக்கும்

வாகை சூடவந்த ரமலானே

உன் வருகை மகத்துவமானது..!

வருக..ரமலானே..வருக..!


ஒன்றுக்கு நூறாய் கூலியை

தந்து எங்களை ஜெயங் கொல்ல

வைக்கும்.....

வாகை சூட வந்த ரமலானே

உன் வருகை மகத்துவமாது..!

வருக..ரமலானே..வருக..!


அமல்கள் பல புரிந்து

பாவங்கள் கலைத்து

நல்லோரின் கூட்டத்தில்

நமை சேர்க்கும்...

வாகைசூட வந்த ராமல்லனே

உன் வருகை மகத்துவமானது...!

வருக..ரமலானே..வருக..!


எனதருமை சகோதர சகோதரிகளே

ஈருலக அமுதம் நல்லமல்களுக்கும்

சொர்கமேனும் சுந்தரபதியை

நல்கிடும் .......

இந்த புனித மிகு ரமலானை

நம் உயிர் உள்ள காலமெலாம்

சந்தோசமாக வரவேற்ப்போம்....

வல்ல நாயன் நம் அனைவருக்கும்

இந்த வசந்தத்தின் வருகையின்

வாசனையை நுகரும்

பாக்கியம் அருள்வானாக .....


வாகை சூட வந்த ரமலானே..

உன் வருகை ....

வசந்தமானது...

மகத்துவமானது...

புனிதமானது...

வருக.......ரமலானே...வருக....

எங்கள் வாழ்வில் வசந்தம்  வீச.....

வருக....ரமலானே...வருக....!!!




ஆக்கம் : கவிமகன் காதர் .தோஹா கத்தர்.


வரலாற்று பெருமை மிகு வள்ளல் நபி நாயகமே


உயிருக்கும் மேலான உத்தமரே நாயகமே!

உம்மைவிட மேலான உயிரேது நாயகமே?

உம்மிநபி ஆனாலும் உங்களுக்கு இணையாக

இம்மியது அளவேனும் வேறுயார் நாயகமே?


சுடுகின்ற மணல்மீது சூழும்கார் இருட்டினிலே

சுடர்வீசு மதிஎனவே அரபுகளின் நாட்டினிலே

பாசமிகு அன்னைநல் ஆமினம்மா மடியினிலே

நேசமிகு சேயெனவே அவதரித்த நாயகமே!


சத்தியத்தை சொல்வதனால் வந்ததுயர் துன்பங்கள்

சகித்தவரே சாந்தமிகு இரசூலே நாயகமே!

வாளேந்தி வந்தஉமர் தோளோடு துணைநின்ற

வரலாற்று பெருமைமிகு வள்ளல்நபி நாயகமே!


அறுபத்து மூன்றாண்டு அருமார்ந்த வாழ்வதிலே

இருபத்து மூன்றாண்டு இறைவேதம் சுமந்தவரே!

ஒருபோதும் உம்புகழை மறுக்காத இதயத்தை

பெறுதற்கே எமக்காக வேண்டிடுவீர் நாயகமே!


ஆக்கம் : முஹம்மத் தானிஷ் பாச்சா


தீவிரவாதம் உருவாவது அநீதத்தினால் மட்டுமே


கண்கள் மூடினாலும் உறக்கம் வராது

கால்கள் தேய்ந்தாலும் நிறுத்த இயலாது

கைகளை உயர்த்தினால் ரத்தம் இருக்காது

சிந்தனை முழுவதும் அமைதியே

ஆனால் மற்றவர்களின் சிந்தனையிலே தீவிரவாதி

சோதனையை கண்டு விரைந்தோடும் கூட்டம்

சோதனையை எதிர்கொள்ளும்பொழுது உணரும்

தீவிரவாதத்தின் அர்த்தம்

ஒவ்வொரு மனிதரும் மரணத்தை சுவைப்பான்

ஆனால் அவன் எவ்வாறு சுவைக்கிறான் என்பதில்

தான் மாறுபடுகிறது இவ்வுவுலகம்....

தீவிரவாதம் காய்த்த இலையல்ல

காய்ந்த கனி அவை விழுந்தாலும்

நிச்சயம் உருவாகும் பல கனி

காய்ந்த கனி மனிதனின் கண்களுக்கு

ஏளனம்தான் ஆனால் அக்கனியினால்

மட்டுமே ஒரு உயிரை உருவாக்க இயலும்...

அன்றைய தினம் சமூகத்தை

குலைக்க நினைப்பவன் தான்

தீவிரவாதி ஆனால் இன்றோ

சமூகத்தை காக்க நினைப்பவன்தான் தீவிரவாதி

கரங்களோடு எங்கள் வீரர்களான

எங்கள் சகோதரர்களோடு எங்களால்

இணைய முடியவில்லை

ஆனால் எங்கள் கண்ணீரோடு அவர்களை

இணையும் வாய்ப்பு தந்த அல்லாஹுவிற்கே

எல்லா புகழும்

ஆக்கம் : லுதுபியா லுக்மான்


ஏன் இந்த வாழ்க்கை


பெட்டிக் கடை வாங்கி

பட்டணத்து வாழ்க்கை வாழ

பட்டப்பகல் கனவு எதற்கு!


கட்டிக் கொடுக்க குமரியையும்

குட்டிக் குட்டி குழந்தையையும்

வீட்டிற்குள் வைத்திருந்து-உனக்கு

வெட்டி வீண் பேச்சு எதற்கு!


பட்டி தொட்டியெல்லாம் கடன் வாங்கி

வட்டி குட்டி போட்ட பின்னும்

முட்டி மோதி தள்ளாடும்-உனக்கு

திட்டமில்லா வாழ்க்கை எதற்கு!


குட்டைக்குள் மீன் பிடித்து

குட்டிக்கரனம் போட்டு

சுட்டித்தனமாய் திரியும் உனக்கு-கொடி

கட்டிப்பறக்கும் நினைப்பு எதற்கு!

ஆக்கம் : முஹம்மத் தானிஷ்


பாலஸ்தீன மகளே


பாலஸ்தீன மகளே

உன்னை மறந்துவிட்டார்கள்

மறந்தவர்கள் கையில் பணத்தை நிரப்பிவிட்டார்கள்

பணம் பணம் என்று

தன் இனம் அழிவதை வேடிக்கை பார்க்கிறார்கள்

உன் தாயை இழந்தாய்

உன் கண்ணீருக்காக சண்டையிட

உன் இனம் துணியவில்லை

ஆனால் அவர்களது கொள்கைகளுக்காக

சண்டையிட துணிந்துவிட்டார்கள்

வற்றி விட்ட உன் கண்ணீரை துடைக்க

துணியவில்லை ஆனால்

நம் இனத்தை கூறுபோட துணிந்துவிட்டார்கள்


மகளே உன் சகோதரர்களை மறந்துவிடு

அவர்கள் உலகத்தை நேசித்துவிட்டர்கள்

மரணத்தை மறந்து விட்டார்கள்

வாயளவில் ஈமான்

வாழும்போது செல்வ சீமான்


மகளே அவர்கள் வாயால் மட்டும்

சகீதை விரும்புகிறார்கள்

ஆனால் உள்ளதால் உன்னை

வைத்து அவர்கள் உலகில் பெயர் பெற நாடுகிறார்கள்


நீ உன் மரணத்தை எதிர்கொள்ள போராடுகிறாய்

இங்கு இவர்கள் செல்வத்தை எதிர்கொள்ள போராடுகிறார்கள்

மன்னித்துவிடு மகளே உன்னை

நினைத்துகொண்டிருக்கும் நல்ல சகோதரனும்

இருக்கிறான் ஆனால் அவன் நாதியற்று

கிடக்கிறான் சோகத்தை பகிர்ந்துகொள்ள

இறைவனையே அழைக்கிறான்


மறவாதே மகளே இவர்கள் உன்னை மறந்தாலும்

இறைவன் உன்னை மறக்க மாட்டான்

உன் கண்ணீருக்கு இந்த பெயர்தாங்கிகளிடம்

பதில் வராது ஆனால் உன் இறைவன்

உனக்கு பதில் அளிப்பான்

உன்னை நேசிக்கும் உன் இனம் ஒருநாள்

வெளிவரும் அன்றோ அண்ணா

என்றழைக்க நீ இருப்பாயா

என்பது இவர்களுக்கு விளங்கவில்லை


இன்றோ நமது பிரச்சனையயே

தாங்கமுடியவில்லை என்று கூறி

பத்து மாடி வீட்டில் இருந்து கூறுகிறார்

உன் விட்டில் உள்ள குண்டுதுலைத்த

கோரம் இவர்களுக்கு என்ன புரியும்


சாலையோரம் சாகக்கிடக்கும்

ஜனங்களுக்கு இறந்காதவர்களா

மகளே உன் ஓலத்திற்கு இறங்கபோகிரார்கள்


நீபோராடும் போராட்டம்

உன் உயிரோடு என்பது இவர்கள் அறிந்தாலும்

உன் ரேத்ததைவிட இவர்களுக்கு

இவர்களது பணவீக்கதில்தான் நாட்டம்


மகளே அங்கு உன் சகோதரன் பிறந்தால்

அவர்கள் போராட்டத்திற்கு வலு

இங்கு உன் சகோதரன் பிறந்தால் இவர்களது

பொருளாதாரத்திற்கு வலு


வெளிநாட்டில் வாழும் ஓவ்வொரு

சகோதரனும் உன்னை நேசிக்கிறான்

ஆனால் ஏனோ அவனும் தாய்நாடிற்கு

சென்றவுடன் உன் கனவை மறக்கிறான்


விட்டுவிடு மகளே உனக்கும்

உன் வீரத்திற்கும் கால்தூசியை

போன்ற இவர்களை அழைக்காதே

உன்னை மிகவும் நேசிக்கும் உன் அல்லாஹுவிடமே

உன் உதவியை கேள்


உன் கண்ணீர் உன் சகோதரனை

விழிக்க செய்ய உதவ வேண்டும்

உன்னை நேசிக்கும் உன் சகோதரர்களை

உனக்கு உதவ முயல வேண்டும்

உன் கண்ணின் சிறுதுளியின் ஈரத்தை

அல்லாஹ் உன்னை விட்டு மறைக்க உதவ வேண்டும்

என்று பிராத்தனையோடு உன்னை நேசிக்கும்

உன் சகோதரன்,,,,

ஆக்கம் : சஹானா ஜிப்ரி


நோன்புப் பெருநாள்


மீண்டும் பிறை தேடும்

வேட்டையை துவங்கி விட்டோம்

இது நம் விழாக் காலம்

இனியும் விழிகளில் புதுக் கோலம்


கண்ணில் தென்பட்டாலும் கணக்கின்றி

அலட்ச்சியம் செய்யும் ஒன்றிற்காய்

தவம் இருந்து மாநாடு போடும்

தருணம் இது ......

அதுவும் வந்தது வேளை என

கண்ணில் படாது மறைந்து கொண்டு

கண்ணாம்பூச்சியாடும் காலம் இது


இந்த வருடத்தில்

பிறை தேடத் துவங்கும்

இரண்டாவது தருணம் இது


கண் விழித்துக் காத்து

“செய்த பாவங்கள் போக்குவாய் இறைவா!” என

இறைவனை மட்டும் சிந்தித்து

அவனிடம் மன்றாடி

மனோ இச்சைகளுடன் போராடி

இனி நன்மை தேடி நகரும் வேளை இது


புத்தாடை பூண்டு

கரங்களில் நாணயங்கள் நெளியும்

கனவுகள் நிறைந்து

தூக்கத்தில் சிரிக்கும் குழந்தைகளின்

குரல் ஒலிக்கும்

இரவுகளை சுமக்கும் வாரம் இது


மாதம் ஒன்று முழுவதுமாய் நோன்பிருந்து

மனம் முழுக்க எம் இறைவனை சுமந்து

இறுதியாய் இன்பம் பெறவென

இறைவன் தந்த ஒரு திருநாள்

அது தான் எங்கள் நோன்புப் பெருநாள்

ஆக்கம் : சொல்லோவியச் செம்மல் அஹமது அலி


வேத மறையும்

நபியின் மொழியும்

சேர்ந்தால் நலமாகும்

தீனின் நெறியால்

தீமை விலகி

எல்லாம் சுகமாகும்..

மூன்று பத்து பிவினைக் கொண்டு

மூடர் மனதை திருந்திடச் செய்த

அகிலம் போற்றும்

அருள் மறை போற்றி..!!!


(வேத மறையும்)


மருத்துவமும் இருக்கு

மகத்துவமும் இருக்கு

மன்னர் தந்த மாமறையாம்...


ஓதும் போதும் இனிக்கும்

கேட்கும் போதும் ருசிக்கும்

அன்னல் தந்த அருள் மறையாம்..


அள்ள அள்ள அருள் குறையாது

சொல்லி மகிழ நா தயங்காது


உலகம் போற்றும்

பொது மறை போற்றி...!!


(வேத மறையும்)


அறிவியலும் இருக்கு

அதிசயமும் இருக்கு

அற்புத தீன் மறையாம்....


வானவரின் கோமான்

சீதனமாய் தந்த

சீர்மிகும் திருமறையாம்...


மாசில்லாத மகிமையினாலே

மாநிலத்தை நேர்வழியாக்கும்


மகிபன் தந்த

மாமறை போற்றி..!!!


(வேதமறையும்)


வாழ்வியலும் இருக்கு

வழிமுறையும் இருக்கு

வல்லோன் தந்த வான்மறையாம்....


சொர்க்கம் செல்லத் தூண்டும்

நரகப் பாதை மூடும்

நாயன் தந்த நன்மறையாம்...


நிகரில்லாத நீதியைச் சொல்லும்

நீதியரசனின் நேர்மையின் சின்னம்


நிலைத்து ஓங்கும்

நேர்மறை போற்றி..!!


( வேத மறையும்)


ஆக்கம் : முஹம்மது பர்ஹான் பஷீர் (காத்தான்குடி)


என் உயிரிலும் மேலான யா ரசூலல்லாஹ்


அஹ்மது முஹம்மது எம் நபியாம்

ஆளும் இறைவனின் குல மதியாம்

பல கோடி புகழ்களின் அதிபதியாம்

இந்த பார் மீது வந்த அருள் நதியாம்


கருணைக்கு அவர் தான் அகராதி

எம் கல்பினில் ஒளிரும் ஜெகஜோதி

அவர் வார்த்தைதான் உலகினில் உயர் நீதி

நல்ல வாழ்கைக்கு சொன்னார் பல சேதி


உண்மையை பேசிய வழிகாட்டி

உறுதியாக இஸ்லாத்தை நிலை நாட்டி

இந்த உலகத்தை அழைத்தீர் இரு கரம் நீட்டி

அந்த உயர்வான சொர்கத்தின் திசை காட்டி


அனுதினம் உங்களின் முகம் தேடி

அலைகிறது இவ் ஏழை மனம் வாடி

உங்களின் திரு காட்சி தனை நாடி

வர வேண்டும் என் கனவுகள் கோடி


அழகினில் நீங்கள் ஒரு செம்மதி

அந்த நிலவை விடவும் வெண்மதி

நான் வர வேண்டும் உங்கள் சந்நிதி

அதுவரை எனக்கு இல்லை நிம்மதி

ஆக்கம் :  A. முஹம்மத் ஹனீப்  (குலசேகரன் பட்டினம்)


தாங்கள் சாதாரண மனிதரா?


ஹாத்தமுன் நபி கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களாகிய தாங்கள் சாதாரண மனிதரா யா ரஸூலுல்லாஹ்!!!


அனைத்து நபிமார்களும் முன்னறிவிப்பு செய்த நாயகம்

தாங்கள் அல்லவா? தாங்கள் சாதாரண மனிதரா யா ரஸூலுல்லாஹ்!!!


அப்துல்லாஹ், ஆமினா ரலியல்லாஹு அன்ஹு இவர்களுக்கு முன்னறிவிப்போடு பிறந்த தாங்கள் சாதாரண மனிதரா யா ரஸூலுல்லாஹ்!!!


பிறக்கும் போதே கத்னா செய்து பிறந்தவர் தாங்கள் அல்லவா?

தாங்கள் சாதாரண மனிதரா யா ரஸூலுல்லாஹ்!!!


தாங்கள் பிறந்த செய்தியை சொன்ன அடிமைக்கு விடுதலை கிடைத்ததே தாங்கள் சாதாரண மனிதரா யா ரஸூலுல்லாஹ்!!!


அடிமையை விடுதலை செய்த சிறிய தந்தையின் விரலின் மூலம் அல்லாஹ் உணவு வழங்கினானே 

தாங்கள் சாதாரண மனிதரா யா ரஸூலுல்லாஹ்!!!


பொய்யுரைப்பான் என்ற மனித தன்மைக்கு முரணாக இருந்த

தாங்கள் சாதாரண மனிதரா யா ரஸூலுல்லாஹ்


பொறுமையிழப்பான் என்ற மனித தன்மைக்கு முரணாக இருந்த

தாங்கள் சாதாரண மனிதரா யா ரஸூலுல்லாஹ்


கர்வமுடயவன் என்ற மனித தன்மைக்கு முரணாக இருந்த

தாங்கள் சாதாரண மனிதரா யா ரஸூலுல்லாஹ்


தவறிழைப்பவன் என்ற மனித தன்மைக்கு முரணாக இருந்த

தாங்கள் சாதாரண மனிதரா யா ரஸூலுல்லாஹ்


தன்னை உலக ஆசைக்கு அற்பணித்த மனித தலைவர்களுக்கிடையில் உலக ஆசைக்கு தன்னை அற்பணிக்காத தலைவராக இருந்த 

தாங்கள் சாதாரண மனிதரா யா ரஸூலுல்லாஹ்


தாங்கள் நடந்து சென்றால் மேகம் வந்து நிழல் தந்து பெருமையடையக் கூடிய 

தாங்கள் சாதாரண மனிதரா யா ரஸூலுல்லாஹ்


முழு நிலவை இரண்டாக பிளந்து காட்டிய 

தாங்கள் சாதாரண மனிதரா யா ரஸூலுல்லாஹ்


மறைய இருந்த சூரியனை மறைவதை தடுத்த

தாங்கள் சாதாரண மனிதரா யா ரஸூலுல்லாஹ்


மலக்குமார்களிடம் பேசிய தாங்கள் சாதாரண மனிதரா யா ரஸூலுல்லாஹ்


மனிதனால் செய்ய முடியாதததை செய்து முடித்தீர்களே

தாங்கள் சாதாரண மனிதரா யா ரஸூலுல்லாஹ்


சாதாரண மனிதன் வாழ வேண்டிய முறையை தாங்கள் வாழ்ந்து காட்டியதால் தாங்கள் சாதாரண மனிதரா யா ரஸூலுல்லாஹ்!!!


புகழின் உச்சியில் தன்னை கடவுளாக உயர்த்திக்கொள்ளும் மனிதர்களுக்கிடையில் அல்லாஹ் ஒருவனே என்றுரைத்த

தாங்கள் சாதாரண மனிதரா யா ரஸூலுல்லாஹ்!!!


புகழுக்குரியவர் என்னும் பெயரை பெற்று புகழனைத்தும் தங்களை தேடி வந்த போதும் புகழனைத்தும் அல்லாஹ்வுக்கு சமர்பித்த தாங்கள் சாதாரண மனிதரா யா ரஸூலுல்லாஹ்!!!


நாளை மஹ்ஸரில் எங்களுக்காக மன்றாடுபவராக இருக்கும் தாங்கள் சாதாரண மனிதரா யா ரஸூலுல்லாஹ்


மறுமையில் தங்களின் நிலை தெரியாமல் தாய், மகன் என்ற மனித பாசப்பினைப்பை மறந்து தான் சொர்க்கம் சென்றால் போதும் என்று தன்னலமாக நினைக்கும் மனிதர்களின் சிந்தனைக்கு அப்பார்பட்டு உம்மத்துக்காக மன்றாடும்

தாங்கள் சாதாரண மனிதரா யா ரஸூலுல்லாஹ்!!!


தாங்கள் தான் சாதாரண மனிதன் என்று தாங்களே சொல்லிக்கொண்டதால் தரங்கெட்ட மனிதர்களும் தங்களை சாதரண மனிதர் என்று கூறுகிறார்கள். நான் கேட்கிறேன்

இவ்வளவு தன்மைகள் பெற்றிருந்த தாங்கள் சாதாரண மனிதர் என்றால் தங்கள் தன்மையில் எதுவும் இல்லாத நாங்கள் யார் யா ரஸூலுல்லாஹ்!!!


இன்னும் எழுதி Post செய்ய முடியாத காரணத்தால் நிறைவு செய்கிறேன். யா ரஸூலுல்லாஹ்


இப்படிக்கு தங்களின் முகத்தை காண ஆவலோடும் உங்கள் தோழனாக வேண்டும் என்று இவ்வுலகில் ஏங்கும் உங்களின் நேசன்.


மறுமையில் இது நடைபெறும் என்று நம்பியவனாக வல்ல ரஹ்மானிடம் துவா கேட்கிறேன். யா அல்லாஹ் என் துவாவை ஏற்றுக் கொள்வாயாக. ஆமீன்.



ஆக்கம் : மாஹின் அபூ


இறைகாதலே என் உயிரை வருடு


நான் எங்கே?

எங்கிருந்து நான்?

நான் என்று சொல்வது யாரோ?

நான் என்பவன் யாரோ?

இருத்தலும் இயங்குதலும்

சுயமாய் கொண்டவனே

நிலைத்து நிற்பவனே இப்பூலகில்

பொழுது மாற்றத்தில்

பருவ மாற்றத்தில்

காரண உலகில்

காரிய மாற்றத்தில்

பரம்பொருள் அவனே

பூமி மடியிலே

தாய் கருவிலே

தந்தையின் முதுகிலே

அதையும் தாண்டியே

சுமந்தது அவனே!

வளர்ச்சியில்

வீழ்ச்சியில்

காதல் சூட்சமதில்

காதலும் அவனே!!

நான் எங்கே நீ நீயே தான்!

ஆக்கம் : மாஹின் அபூ


உன் கருணையில் என் வாழ்வு


காலங்கள் கரைந்தோடியது

பாவங்கள் சுமந்தபடி வாழ்வு

மறுமை தூரமென்று

மதிக்கெட்டு மன்னிப்பை தூரமாக்கினேன்.


மன்னிப்பாளனே

உன் கருணை மனம்

மன்னிப்பை விரும்புமே!


அழுது விடுவேனா?

உனை தொழுது விடுவேனா?

உம் கருணையில் தான்

என் விடியலே!

 

ஆக்கம் : பாத்திமா ஸஹ்ரா வஸீர் (கம்பளை)


மண்ணறையை சந்திக்கும் வரை 



யா அல்லாஹ்…
விடிந்தது முதல்
தூங்கும் வரை – உன்
நினைவில் வாழ சொல்லிக்கொடு!


விழியிலிருந்து வழியும்
கண்ணீர் உனக்காக மட்டும்
இருக்கச் சொல்லிக்கொடு!


என் கண்கள் – உன்
புகழ் காணவும்
என் உதடு – உன்
புகழ் பாடவும் சொல்லிக்கொடு!


வாழ்க்கைப் பாதையில்
பாவம் குவிந்திருப்பதை – என்
கால்களுக்கு சொல்லிக்கொடு!


என்னிடம் இருப்பவற்றை எல்லாம்
அடுத்தவர்களுக்காக அர்பணிக்க – என்
கைகளுக்கு சொல்லிக்கொடு!


இமை மூடும் நேரம் கூட - உன்
நினைவே என்னுள் வர
என் மனதுக்குச் சொல்லிக்கொடு!


உன்னை நினைக்காத
நொடிப் பொழுதுகளை
எனக்கு வெறுக்கச்
சொல்லிக்கொடு!


உன் படைப்புகள் ஒவ்வொன்றிலும்
உன்னைக் காண
சொல்லிக்கொடு!


உன் அருளின் அர்த்தங்களை
தேடியறிய என் ஆற்றல்களுக்கு
சொல்லிக்கொண்டு!


என் மரணம் நெருங்குவதை
என் இதயத்திற்கு
சொல்லிக்கொடு!


மண்ணறையை சந்திக்கும் வரை
உன் நினைவில் வாழ
சொல்லிக்கொடு!


ஆக்கம் : ஹுசைன் பிலாலி


இறைவன் எழுதிய அழகான கவியே  


இறைவன் எழுதிய அழகான கவியே தாங்களல்லவா

தங்களை பற்றி எழுத கவியில்லையே என்ற கவலையல்லவா


கடல்அளவு உள்ளது எங்களுக்கு அந்த ஏக்கத்தில் விழி சிந்தும் ஒவ்வொருதுளி நீரும் கவியல்லவா

உங்களை நினைத்து துடிக்கும் ஒவ்வொரு இதயமும் கவிதையல்லவா


அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யாரஸுலல்லாஹ்


ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்



ஆக்கம் : ஹுசைன் பிலாலி


கடலினில் கரைந்த உப்பென எங்கள் கல்பினில் நிறைந்த கலிமா உதிரத்தில் உறைந்த கலிமா நினைவினில் மதுரமாய் இனிக்கும் கலிமா என்னிலை மறந்து உன்னிலே கரைந்து க(இ)ரை சேருவது எக்காலமோ?


அதுவே எங்கள் பொற்காலம்! விழிகளில் வழிகின்ற நீரெல்லாம் உமை தேடுதே இழுத்து விடும் சுவாஸமெல்லாம் உங்கள் கவிபாடுதே மதினத்து மன்னரை காணமனம் நாடுதே சுவனமதில் இருந்தாலும் சுகமில்லையே அன்பே உங்கள் அருட்பார்வை கிடைத்தால் எட்டு சுவனங்களும் அதர்கு ஈடில்லேயே


அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யாரஸுலல்லாஹ்


**********************************************************************

அருளான பேரின்ப காதலரே அழிகின்ற உலகினில் நிலையான உங்கள் மேல் நாங்கள் கொண்ட எம் உயிரினும் மேலான காதலில் அழிந்திட அருள் புரிவீர் நாயகமே எம் ஈருலக தாயகமே


ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்


**********************************************************************

பேனா எழுதாத கவி மதினா!

உயிர் நா எழுதும் கவியே மதினா!

மதிக்கு மதி தரும் மதினா!

வின்மதி ஒளி பெறுவது உன் அருள் மதினா!

நான் என்று பெருமை கொள்ள உனக்கு மட்டுமே தகுதி மதினா!


உன்னை காணாத ஏக்கத்தினால் என் விழி மண் விழுந்தை போல வழிகிறது உன்னை என்கண்கள் மீண்டும் காணும் பொன்னாள் என்று வருமோ என்ற ஏக்கத்துடன்.


*********************************************************************************************

சுவனமதை மகிழ வைத்து வாழும் போதிலும்

கவணமதில் எமை நினைத்து வாடும் நாயகமே

படனும் உங்கள் பார்வை இந்த பாவிமீதிலே பெறனும்

உங்கள் அருளை நானும் நாளும் எம் தாயகமே


அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யாரஸுலல்லாஹ்


**********************************************************************

நிம்மதி இல்லையே அமைதியும் இல்லையே உலகினில் வாழ்ந்திட சூழ்ந்தது தொல்லையே உம் பாத அருள் ஞானம் தாரும் பினியாவும் பனி போல ஒடும் உயிரின் உருவே எங்கள் சலாம் இரு உலகின் கருவே எங்கள் சலாம்  அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யாரஸுலல்லாஹ்


**********************************************************************

மகிழ்ச்சியின் பிறப்பிடமே புகழ்ச்சியின் உச்சமே

உம்மை பாடாத நாழுமில்லை உம் நினைவில் வாடாத பொழுதுமில்லை உம்மை காணாத நாட்டமெல்லாம் மலராகி தோட்டமெல்லாம் அந்த மலரெல்லாம் என் தேட்டம் தாங்கி உம் பதமலரடியில் விழுந்துரைக்கும் உம்மை காண துடிக்கின்றான் இந்த பாவி கனவிலாவது சென்று வாருங்கள் யாரஸுலல்லாஹ் என்று அந்த ஸிபாரிஸை ஏற்று வாருங்கள் யாரஸுலல்லாஹ்...


*********************************************************************************************

நீரின்றி அமையாது உலகு (தாங்கள்) என்றரிந்தேன் யாரஸுலல்லாஹ் உங்கள் நினைவு என் இதயத்திலும் உயிரிலும் உணர்விலும் நாடி நரம்பிலும் குருதி ஓட்டத்திலும் உருதியாக நான் மரதியாக இருந்தாலும் ஓடி கொண்டிருக்குது யாஹபீபல்லாஹ் உங்கள் அரவனைப்பில் ஆதரவில் இந்த அனாதையை சேர்த்துகொள்ளுங்கள் உங்களை விட்டால் எங்களுக்கு வேறு கதியில்லை யாஷபீயல்லாஹ்


**********************************************************************************************

அன்பின் ஆரம்பமே பண்பின் பேரிண்பமே உங்கள் நினைவினில் வாடிடும் பொழுதும் சொல்ல முடியாத இன்பத்தை உணர்கிறது உயிர் யாரஸுலல்லாஹ்


உங்களை கண்டால் அந்த இன்பத்தின் அளவிற்கு எல்லையில்லையே யாஹபீபல்லாஹ் ஆதலால் தானோ எங்களின் மரணத் தருனம் காட்சியாகி அந்த வேதணையை இன்பமாக்குகின்றீர் யாஹபீபல்லாஹ்


கருணையின் பிறப்பிடமே எங்கள் மருமையின் சிறப்பிடமே தாங்களன்றோ யாஹபீபல்லாஹ்