MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
அல்லாஹுதஆலா கூறுகிறான்:
"எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு"
(அல் குர்ஆன் - 4 :85)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கூறினார்கள்:
"யாரேனும் ஒருவர் ஒரு நல் (அமலுக்குரிய) வழியை உருவாக்கினால், அதற்குரிய நற்கூலியும், அவ்வழியில் செயலாற்றுபவரின் கூலியும் நல் வழியை உருவாக்கியவருக்கு கிடைக்கிறது. இதனால் செயலாற்றுபவரின் கூலியில் எவ்வித குறைவும் செய்யப்பட மாட்டாது"
(ஸஹிஹ் முஸ்லிம் , மிஷ்காத்)
அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே,
? அல்லாஹ்வினதும் அவனது திருத்தூதரினதும் பரிசுத்தமான அன்பை பெற வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
? வாழ்க்கையில் அதிகமதிகம் நன்மை செய்து கொண்டு இருக்க விரும்புகிறீர்களா?
? பிறர் செய்யும் நன்மைகளால் உங்களுக்கும் அதற்கான நற்கூலி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
? நீங்கள் மரணித்த பின்பும் உங்களுக்கு நன்மை வந்து சேர வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
? உங்களால் மனித சமுதாயத்திற்கு ஏதாவது நன்மை நடக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
மேலே உள்ள கேள்விகளுக்கு உங்களின் பதில் "ஆம் " என்றால் இதோ எங்களின் அழைப்பு :
"நன்மையை நோக்கிய எங்களின் நீண்ட பயணத்தில் நீங்களும் எங்களோடு கை கோர்த்து கொள்ளுங்கள்"
ஆம், உங்களின் ஆக்கங்களையும் ஊக்கங்களையும் எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.
நீங்கள் எங்களுக்கு எவ்வாறு உதவலாம்?
* உங்களிடம் உள்ள மார்க்க சொற்பொழிவு, கஸீதா, கிறாத், இஸ்லாமிய விசேட நிகழ்ச்சிகள் போன்ற ஆடியோ மற்றும் வீடியோக்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.
* நீங்கள் எழுதிய அல்லது பிறரால் எழுதப்பட்ட இஸ்லாமிய நூல்கள், கட்டுரைகள், கதைகள், கவிதைகள், மருத்துவ குறிப்புகள், இன்னும் மக்களுக்கு பிரயோசனம் தரக்கூடிய அத்தனை ஆக்கங்களையும் நீங்கள் எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.
பெண்கள் சம்பந்தப்பட்ட கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை நீங்கள் எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.
உங்களால் மற்றவர்கள் பிரயோசனம் அடையட்டும்.
உங்கள் ஆக்கங்களை அனுப்ப வேண்டிய எமது ஈமெயில் முகவரி: admin@mailofislam.com
தமிழ் பகுதி - உங்கள் ஆக்கங்களை அனுப்புங்கள்