MAIL OF ISLAM

Knowledge & Wisdom



பெண்கள் முக அழகு குறிப்புகள்


மனித உடல் என்பது இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட ஒரு அமானிதமாகும். இவ்வாறு வழங்கப்பட்ட அந்த அமானிதத்தை ஒழுங்காக பராமரிப்பது மிக முக்கியம். ஒவ்வொரு மனிதனும் அழகாகவே படைக்கப்பட்டுள்ளான். மனிதனின் பார்வைக்கு பார்வையே அழகு மாறுப்படுகிறது. ஒவ்வொரு ஆணும் பெண்ணும் சுத்தமாகவும் அழகாகவும் இருக்குமாறு இஸ்லாம் கட்டளை இடுகிறது. அசுத்தமாக இருப்பதை இஸ்லாம் வெறுக்கிறது.


குறிப்பாக பெண்கள் மார்க்கம் அனுமதிக்கப்பட்ட முறையில் தம்மை அழகுப்படுத்துவது வரவேற்கத்தக்கது.  குறிப்பாக நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல்வேறு இயற்கை பொருட்களில் நிறைய மருத்துவ குணங்கள், அழகுப்படுத்தும் குணங்கள் உள்ளன. எனவே அவற்றை முறையாக பயன்படுத்த இந்த பக்கம் பெரிதும் உதவும்.

முகப் பராமரிப்பு


முகச்சுருக்கம் நீங்கி முகம் பளபளவாக


* தினமும் பாலில் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எந்த நோய்களையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலை உடல் பெற்று விடும். முகம் அழகாகவும், உடல் பளபளப்பாகவும் இருக்கும்.


* அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகமாகும் என்று பழங்கால அரேபிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்.


* முகச் சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்து உடம்பிற்கு தடவி. பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.


* தினமும் முகத்தில் ஆலிவ் எண்ணெய் பூசி வர முகச்சுருக்கம் நீங்கி பளபளப்பாக இருக்கும்.


* ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.


* உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.


* பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.



முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க


* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.


* முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.



முகத்தில் உள்ள தழும்புகள் மறைய


* இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.


*முகத்தில் பருக்கள் இருந்தால் வெள்ளைப் பூண்டையும், துத்தி இலையையும் சம அளவு எடுத்து அதை நறுக்கி, பின் நல்லெண்ணெயில் போட்டுக் நன்கு காய்ச்சி தினசரி பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால், விரைவில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.


* வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்குரு வராமல், வெளியில் கருத்துப் போகாமல் இருக்கும்.



வறண்ட மற்றும் எண்ணெய் பசை மிக்க முகங்களுக்கு


* அப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.


* தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.


* தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.


* மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.


* ஒவ்வொருவருக்கும் 2 வகையான சருமம் உள்ளது. ஒன்று உலர்ந்த சருமம். மற்றது எண்ணெய் வடியும் சருமம். எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதே போல் எண்ணை வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசிக் கொள்ளலாம். இதன் மூலம் முகம் புத்தொளிபெறும்.


கண்கள் பராமரிப்பு


கண் இமைகள் அதிகரித்து அழகு பெற


* தினமும் இரவு தூங்கும் முன் இரண்டு கண்களிலும் சுர்மா இட்டு கொண்டு தூங்கி வந்தால் நாளடைவில் கண் இமைகள் அதிகரித்து கண்களுக்கு அவை இயற்கை அழகை கொடுக்கும்.


கண்ணில் கருவளையம் மறைய


* சில பெண்களுக்கு கண்களைச் சுற்றிகருப்பு வளையம் இருக்கும். இதை நீக்க வெள்ளரி, உருளைக் கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு துணியை பன்னீரில் நனைத்து கண்ணின் மீது வைத்து படுத்து தூங்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.


கண் நோய்களில் இருந்து கண்களை பாதுகாக்க


மாதுளை மொட்டை தொடர்ந்து சாப்பிட்டுவிட்டால் ஒரு வருடத்திற்கு கண்வலி, கண்ணில் நீர் வடிதல், பூளை தள்ளுதல் போன்ற கண் சம்பந்தப்பட்ட எந்த வியாதியும் வராது என்றும், மூன்று மாதுளை வித்தை விழுங்கி விட்டால் ஒரு வருடத்திற்கு கண்ணில் பூளை தள்ளாது என்றும் புகழ்பெற்ற மருத்துவ நூலான திப்புன்னபவியில் கூறப்பட்டுள்ளது.

உதடு பராமரிப்பு


உதடு உலர்ந்து விட்டதா?


* உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு சிலருக்கு இரத்தம் கசியும். உதடு கறுத்து விடும். இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பதுதான். இதைப் போக்க வெந்தயத்தை 1 ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்து விடவேண்டும். இரவில் வெண்ணையை சிறிதளவும் உதட்டில் தடவவும். சிறு உருண்டையை விழுங்கிவிடவும். இப்படிச் செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்து விடும்.




காது பராமரிப்பு


காது அழகை பராமரிப்பது எப்படி?


* உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவவும், 15 நிமிடம் கழித்து காதுகளை அழுத்தமாக துடைக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம் மாயமாகிவிடும். முகத்திற்கு பூசும் பேஸ் பேக்குகளை காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக தெரியாது.







இஸ்லாமிய  மருத்துவம்


நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களில் எத்தனையோ மருத்துவ குணங்கள் உள்ளன. அவற்றை தெரிந்து கொண்டு பயன் பெறுங்கள்.


அல்குர்ஆனில் இறைவனால் கூறப்பட்ட மருத்துவம் மற்றும் நபிகம் நாயகம் ﷺ அன்னவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ குறிப்புகளின் தொகுப்பு

கூந்தல் பராமரிப்பு


பெண்களுக்கு அழகு தருவதில் தனி இடம் பெறுவது பெண்களின் கூந்தலாகும். அதனை அழகு படுத்துவது எப்படி?


கூந்தல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை அழுதுக.

கை, கால்கள் பராமரிப்பு


அன்றாடம் நாம் செய்யும் வேலைகளால் எமது கை, கால்கள் அழகிழந்து போவது சாதரணமே.


அவற்றின் அழகை எவ்வாறு பாதுகாப்பது? இந்த லிங்கை அழுத்தி வாசியுங்கள்.

சரும பராமரிப்பு


சூரிய கதிர்கள், வயது முதிர்ச்சி, அதிக யோசனை போன்ற காரணிகளால் பெண்கள் சரும சுருக்கம், கருப்பான சருமம் போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கலாம்.


அவற்றுக்கான இயற்கை வைத்தியம்  

மேலதிக அழகு குறிப்புகள் - www.womanofislam.com  


இன்னும் அதிகமான அழகு குறிப்புகளை எமது தனி பெண்கள் இணையத்தளமான www.womanofislam.comதளத்தில் அழகு குறிப்புகள் என்னும் பகுதியில் நீங்கள் பார்வை இடலாம்.