Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.



அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகின்றேன்)

1. அனைத்துப் புகழும், அகிலங்கள் அனைத்தி (னையும் படைத்துப் பரிபக்குவப்படுத்துகி)ன்ற ரப்பாகிய அல்லாஹ்வுக்கே உரியது.

2. (அவன்) அளவற்ற அருளாளன்; மிகக் கிருபையுடையவன்.

3. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி.

4. (யா அல்லாஹ்!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

5. எங்களை நீ நேர்வழியில் நடத்துவாயாக!

6. எவர்களின் மீது நீ அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழியில் (நடத்துவாயாக!)

7. (அது) உன் கோபத்துக்குள்ளானோர் வழியுமல்ல; நேர்வழி தவறியோர் வழியுமல்ல.

சூரத்துல் ஃபாத்திஹா – 1   (தோற்றுவாய்)
(மக்காவில் அருளப்பட்டது – மக்கீ )
ருகூஃ - 1, சொற்கள் – 25, வசனங்கள் – 7, எழுத்துகள் – 126