Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துத் தாரிக் – 86  (விடிவெள்ளி)
(மக்கீ)  பிரிவு - 1,  சொற்கள் – 61, வசனங்கள் – 17,  எழுத்துகள் – 239



அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. வானத்தின் மீதும், “அத்தாரிக்” (என்னும் விடிவெள்ளியின்) மீதும் சத்தியமாக –

2. (நபியே!) “அத்தாரிக்” என்னவென்று உமக்குத் தெரியுமா?

3. (அது) பிரகாசிக்கும் ஒரு நட்சத்திரம்.

4. ஒவ்வொரு நப்ஸுக்கும் (ஆத்மாவுக்கும்) – அதன் மீது காவலாளி இல்லாமலில்லை.

5. எனவே, மனிதன் எதிலிருந்து தான் படைக்கப்பட்டுள்ளான் என்பதை (நோட்டமிட்டு)ப் பார்ப்பானாக!

6. குதித்து வெளியாகும் நீரினால் அவன் படைக்கப்பட்டுள்ளான் –

7. (ஆணுடைய) முதுகந்தண்டிற்கும், (பெண்ணுடைய) நெஞ்செலும்புகளுக்குமிடையில் இருந்து அது வெளியாகிறது.

8. நிச்சயமாக (ரப்பான) அவன், அவனை (மனிதனை இறந்தபின் உயிர் கொடுத்து) மீள வைப்பதின் மீது சக்தியுடையவன்.

9. இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும் நாளில் –

10. (மறுமையை நிராகரிக்கும்) அவனுக்கு (தண்டனையை விட்டும் தப்பிக்க) எவ்விதச் சக்தியும் இராது: உதவி செய்பவரும் இருக்க மாட்டார்.

11. (திரும்பத் திரும்ப) மழை பொழிதலுடைய வானத்தின் மீது சத்தியமாக –

12. (தாவரங்கள் முளைப்பதற்காக) பிளத்தல் உடைய பூமியின் மீது சத்தியமாக –

13. நிச்சயமாக இ(ந்த குர்ஆனை)து (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துக் காட்டும் சொல்லாகும்.

14. இது விளையாட்டு (ம் வீணானதுமாக) எடுத்துக் கொள்ளக் கூடியது) அல்ல.

15. நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகப்) பெரும் சூழ்ச்சி செய்கின்றனர்.

16. நானும் சூழ்ச்சியாக சூழ்ச்சி செய்கிறேன்.

17. எனவே (நபியே!) காபிர்களுக்கு அவகாசம் கொடுப்பீராக! (நீண்ட காலமல்ல!) சிறிது காலம் அவர்களுக்கு நீர் அவகாசம் கொடுப்பீராக!