Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துஸ் ஸில்ஸால் – 99  (பூமி) உலுக்கப்படுதல்
(மதனீ)  பிரிவு - 1,  சொற்கள் – 35,  வசனங்கள் – 8,  எழுத்துகள் – 149



அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. பூமி – அதனுடைய பெரும் உலுக்குதலாக உலுக்கப்படும் போது –

2. பூமி, தன சுமைகளை வெளியாக்கும் போது –

3. “இதற்கு என்ன நேர்ந்து விட்டது?” என்று மனிதன் கூறுவான்.

4. அந்நாளில் அது (-பூமி) தன்னுடைய செய்திகளை அறிவிக்கும் –

5. (அவ்வாறு அறிவிக்கும்மாறு) நிச்சயமாக உம்முடைய ரப்பு அதற்கு வஹி (யினால் கட்டளையிட்டு) அறிவித்த காரணத்தால்.

6. அந்நாளில் மனிதர்கள் பல பிரிவினர்களாகத் திரும்பி வருவார்கள் –அவர்களுடைய செயல்கள் (அவர்களுக்குக்) காட்டப்படுவதற்காக.

7. எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மையைச் செய்தாலும் அத(ன் பய)னை அவர் கண்டு கொள்வார்.

8. இன்னும் எவர் ஓர் அணுவளவு தீமையைச் செய்தாலும் அத(ன் பய)னை அவர் கண்டு கொள்வார்.